நிழலைத் தேடி யலைந்தேன் --அவளை
நினைத்து மனதும் குலைந்தேன்
பழகிட நினைத்தது பாபம் --எனோ
பண்பின்றி நடந்தாள் மோசம்
இரவில் நினைத்து அழுவேன் --ஆயின
இளமை கண்டால் ரசிப்பேன்
உறவைச் சொல்லி அழைத்தேன் --வரும்
உணர்வினில் நெஞ்சம் களைத்தேன்
தனிமை நாடித் திரித்தேன் --தந்த
இன்பத்தை என்றும் நினைப்பேன்
இனிமை வாழ்வினில் பிறக்கும் --அவளின்
இதயக் கதவுகள் திறக்கும்
சிரித்து பேசிஎன்னைக் கொல்வாள் --அந்த
செம்மேனிக் காட்டியெனை வெல்வாள்
விரித்த வலையினில் விழுந்தேன் --இன்று
விரக வேதனையில் துடித்தேன்
எண்ணி எண்ணியே இளைத்தேன் --பூரித்த
இளமை கண்டதும் மலைத்தேன்
பெண்ணில் அவளொரு சிலைதான் --இதனை
புரிந்து கொண்டாலே சரிதான்
காலம் காற்றென ஓடும் --அவளை
காணவே என்மனம் நாடும்
கோல முகமும் இனி வருமா ?--அது
கொள்ளை இன்பமும் தருமா ?
நினைத்து மனதும் குலைந்தேன்
பழகிட நினைத்தது பாபம் --எனோ
பண்பின்றி நடந்தாள் மோசம்
இரவில் நினைத்து அழுவேன் --ஆயின
இளமை கண்டால் ரசிப்பேன்
உறவைச் சொல்லி அழைத்தேன் --வரும்
உணர்வினில் நெஞ்சம் களைத்தேன்
தனிமை நாடித் திரித்தேன் --தந்த
இன்பத்தை என்றும் நினைப்பேன்
இனிமை வாழ்வினில் பிறக்கும் --அவளின்
இதயக் கதவுகள் திறக்கும்
சிரித்து பேசிஎன்னைக் கொல்வாள் --அந்த
செம்மேனிக் காட்டியெனை வெல்வாள்
விரித்த வலையினில் விழுந்தேன் --இன்று
விரக வேதனையில் துடித்தேன்
எண்ணி எண்ணியே இளைத்தேன் --பூரித்த
இளமை கண்டதும் மலைத்தேன்
பெண்ணில் அவளொரு சிலைதான் --இதனை
புரிந்து கொண்டாலே சரிதான்
காலம் காற்றென ஓடும் --அவளை
காணவே என்மனம் நாடும்
கோல முகமும் இனி வருமா ?--அது
கொள்ளை இன்பமும் தருமா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக