திங்கள், 2 ஜூலை, 2018

நிழல் 498

நிழலைத்  தேடி  யலைந்தேன் --அவளை
நினைத்து  மனதும்  குலைந்தேன்
பழகிட  நினைத்தது  பாபம் --எனோ
பண்பின்றி நடந்தாள்  மோசம்

இரவில்  நினைத்து  அழுவேன் --ஆயின
இளமை  கண்டால்  ரசிப்பேன்
உறவைச்  சொல்லி  அழைத்தேன்  --வரும்
உணர்வினில்  நெஞ்சம்  களைத்தேன்

தனிமை  நாடித்  திரித்தேன் --தந்த
இன்பத்தை  என்றும்  நினைப்பேன்
இனிமை  வாழ்வினில்  பிறக்கும் --அவளின்
இதயக்  கதவுகள்  திறக்கும்

சிரித்து   பேசிஎன்னைக்  கொல்வாள் --அந்த
செம்மேனிக்  காட்டியெனை வெல்வாள்
விரித்த  வலையினில்  விழுந்தேன் --இன்று
விரக   வேதனையில்  துடித்தேன்

எண்ணி  எண்ணியே   இளைத்தேன் --பூரித்த
இளமை  கண்டதும்  மலைத்தேன்
பெண்ணில்  அவளொரு  சிலைதான்  --இதனை
புரிந்து   கொண்டாலே  சரிதான்

காலம்  காற்றென  ஓடும் --அவளை
காணவே  என்மனம்  நாடும்
கோல  முகமும்  இனி வருமா ?--அது
கொள்ளை  இன்பமும்  தருமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக