தோழி ;;ஏனடி என்னடி காமாட்சி --உன்னை
கண்டு எத்தனையோ நாளாச்சு
நானும் நீயும் ரொம்பவே தோழியடி நமக்குள்
என்றும் உள்ளது செல்லக் கேலியடி
தலைவி ;;;மனசைப் பொன்னாக வச்சிருந்தேன் --அடியே
மாத்துக் குறையாம வாழ்ந்திருந்தேன்
கனவினில் வந்தான் இளம் காளையடி --அவன்
காலைவரை செய்தான் என்னிடம் லீலையடி
தோழி ;; என்னடி சொல்வது நிசமாடி --நீ
எச்சில் இலையாகப் போனியாயடி
பூனை குடிச்சிட்ட பாலாச்சே --உம
பொழப்பும் கெட்டுப் பாழாச்சே
தலைவி ;;என்ன சொல்வது தெரியவில்லை --அடி
இளமை வேகம் புரிய வில்லை
கண்ணே என்றவன் கதை யளந்தான் --அந்த
கவர்ச்சியிலே நானும் எனை யிழந்தேன்
தோழி ;;இப்படி நீயும் இருப்பாயா -இதனை
நானும் சும்மாவென விடலாமா
தப்படி நீ செய்தது ஞாயமில்லே --அவனை
தட்டிக் கேட்காமே விடுவதில்லே
தலைவி;;;பேசிப் பேசிஎன்னைக் கொல்லாதே --நானும்
உனக்குப் பிரியமானவள் தள்ளாதே
ஆசையாவா நானும் சம்மதி ச்சேன் --அடியே
அழகாகப் பேசிஎனைக் கெடுத்தானே
தோழி ;;துப்புக் கெட்டவ நீ புரிகிறது --அவனையும்
துடைப்பத்தால் அடிக்கணும் தெரிகிறது
அப்பனிடம் சொல்லியந்த ஆளைப்பிடி --இங்கே
அகப்பட்டால் போடட்டும் மூணுமுடி
(சில நாட்களுக்குப் பின்னர் )
தலைவி ;;கனவில் கண்டதும் நெசமாச்சு --அவரை
கல்யாணம் செய்யவும் முறையாச்சு
தோழி கன்னி நீயுமென்பது ருசுவாச்சு --உனது
கவலைகள் எங்கேயோ போயாச்சு
இருவரும் ;;இனிப்பும் சுவையுமா இணைந்திருப்போம் --நாம்
என்றைக்கும் தோழிகளாய் வாழ்ந்திருப்போம்
கண்டு எத்தனையோ நாளாச்சு
நானும் நீயும் ரொம்பவே தோழியடி நமக்குள்
என்றும் உள்ளது செல்லக் கேலியடி
தலைவி ;;;மனசைப் பொன்னாக வச்சிருந்தேன் --அடியே
மாத்துக் குறையாம வாழ்ந்திருந்தேன்
கனவினில் வந்தான் இளம் காளையடி --அவன்
காலைவரை செய்தான் என்னிடம் லீலையடி
தோழி ;; என்னடி சொல்வது நிசமாடி --நீ
எச்சில் இலையாகப் போனியாயடி
பூனை குடிச்சிட்ட பாலாச்சே --உம
பொழப்பும் கெட்டுப் பாழாச்சே
தலைவி ;;என்ன சொல்வது தெரியவில்லை --அடி
இளமை வேகம் புரிய வில்லை
கண்ணே என்றவன் கதை யளந்தான் --அந்த
கவர்ச்சியிலே நானும் எனை யிழந்தேன்
தோழி ;;இப்படி நீயும் இருப்பாயா -இதனை
நானும் சும்மாவென விடலாமா
தப்படி நீ செய்தது ஞாயமில்லே --அவனை
தட்டிக் கேட்காமே விடுவதில்லே
தலைவி;;;பேசிப் பேசிஎன்னைக் கொல்லாதே --நானும்
உனக்குப் பிரியமானவள் தள்ளாதே
ஆசையாவா நானும் சம்மதி ச்சேன் --அடியே
அழகாகப் பேசிஎனைக் கெடுத்தானே
தோழி ;;துப்புக் கெட்டவ நீ புரிகிறது --அவனையும்
துடைப்பத்தால் அடிக்கணும் தெரிகிறது
அப்பனிடம் சொல்லியந்த ஆளைப்பிடி --இங்கே
அகப்பட்டால் போடட்டும் மூணுமுடி
(சில நாட்களுக்குப் பின்னர் )
தலைவி ;;கனவில் கண்டதும் நெசமாச்சு --அவரை
கல்யாணம் செய்யவும் முறையாச்சு
தோழி கன்னி நீயுமென்பது ருசுவாச்சு --உனது
கவலைகள் எங்கேயோ போயாச்சு
இருவரும் ;;இனிப்பும் சுவையுமா இணைந்திருப்போம் --நாம்
என்றைக்கும் தோழிகளாய் வாழ்ந்திருப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக