செவ்வாய், 17 ஜூலை, 2018

செல்வி 515

வாடியென்  தோழி  வண்டமிழ்ச்  செல்வி  --நேற்று
வந்தது  செய்தி  என்னவர்  வருவார்
தேடியே  கிடைத்த  திருமுகம்  அல்லவா --இந்த
தேவியும்   அவரது  சொந்தம்  சொல்லவா

ஊடல்  நடக்கும்  அதிலே  உளறலும்  இருக்கும் --இரவில்
தேடல்  தொடரும்  எனது  தேனிதழ்  விரியும்
வாடிய  பயிரை அந்த  வான் மழை  வளர்க்கும் --என்றும்
வாரிக்  கொடுத்துமே   வற்றிடாது  பொய்கை

கொடுத்து  எடுப்பேன்  குதித்து  நடப்பேன்  --இளம்
குமரியின்  உடலில்  வந்த  கொதிப்பும்  அடங்கும்
படுத்து  உறங்கிட  நல்ல  பாயினைத்  தேடுவேன்  --எனது
பக்தனே  எனக்கு  உதவ  புதுப்    பாயென  விரிவார்

கட்டியே  அணைத்து   கனிமுத்தம்   தருவார் --என்
கண்ணாளன்  அவரை  பொன்னாக  மதிப்பேன்
விட்டுப்  பிரிந்து  விலகிட  மாட்டேன் --நான்
விடிய  விடிய   நல்ல  தூக்கமும்  கெட்டேன்

நீரினில்  ஆடுவோம்  நிலவினில்  கூடுவோம் --மன
நிம்மதி   நாடியே  ஒரு  புகலிடம்  தேடுவோம்
வேறென்ன   சுகம்  இனியும்  வேண்டுமோ  எனக்கு  --அந்த
விண்ணவன்  தருவார்  வெற்றி  யெனும்  கணக்கு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக