ஞாயிறு, 29 ஜூலை, 2018

பள்ளியறை 532

கனவினில்  வந்தவள்   காரிகை  --அவளை
கண்டதும்   மனதிலே   பேரிகை 
துணையென  வந்திடில்  நன்மையே  --எனை
துடித்திட  வைப்பதும்  உண்மையே

அல்லிக்  குளத்தில்  அளவெடுத்தேன்  --அழகினை
ரசித்திட  ஒளிந்து   நின்றேன்
துள்ளித்  துடிக்குது  அவளழகு  --அதனை
தொட்டுச்  சுவைப்பது  தனியழகு

சிரிக்கும்  சப்தமோ  மணியோசை --நான்
தினமும்   பார்த்திடப்  பேராசை
விரித்த  மலர்போல்  பொன்மேனி  --இவளை
விரும்பி  வராதவன்  தவஞானி

கால்களில்  சலங்கை  கலவையிடும்  --உடன்
கண்டவர்   மனமோ  குலவையிடும்
வேலினை  யொத்த  விழியானாள்  --எனோ
விரும்பிய  நான்மட்டும்  பழியானேன்

கன்னி   மீண்டும்  வருவாளா --தூய
காதலை  என்னிடம்  தருவாளா
எண்ணிக்  கலங்கியே  ஏங்குகிறேன்  --அவளை
இதயத்தில்  வைத்துத்  தாங்குகிறேன்

காலம்  எனக்கும்  கை கொடுக்கும்  -அவளது
கருவிழி  என்னையே  வட்டமிடும்
ஞாலம்  என்பது  உள்ளவரை --இங்கு
நாங்கள்  இணைவது  பள்ளியறை  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக