கனவினில் வந்தவள் காரிகை --அவளை
கண்டதும் மனதிலே பேரிகை
துணையென வந்திடில் நன்மையே --எனை
துடித்திட வைப்பதும் உண்மையே
அல்லிக் குளத்தில் அளவெடுத்தேன் --அழகினை
ரசித்திட ஒளிந்து நின்றேன்
துள்ளித் துடிக்குது அவளழகு --அதனை
தொட்டுச் சுவைப்பது தனியழகு
சிரிக்கும் சப்தமோ மணியோசை --நான்
தினமும் பார்த்திடப் பேராசை
விரித்த மலர்போல் பொன்மேனி --இவளை
விரும்பி வராதவன் தவஞானி
கால்களில் சலங்கை கலவையிடும் --உடன்
கண்டவர் மனமோ குலவையிடும்
வேலினை யொத்த விழியானாள் --எனோ
விரும்பிய நான்மட்டும் பழியானேன்
கன்னி மீண்டும் வருவாளா --தூய
காதலை என்னிடம் தருவாளா
எண்ணிக் கலங்கியே ஏங்குகிறேன் --அவளை
இதயத்தில் வைத்துத் தாங்குகிறேன்
காலம் எனக்கும் கை கொடுக்கும் -அவளது
கருவிழி என்னையே வட்டமிடும்
ஞாலம் என்பது உள்ளவரை --இங்கு
நாங்கள் இணைவது பள்ளியறை
கண்டதும் மனதிலே பேரிகை
துணையென வந்திடில் நன்மையே --எனை
துடித்திட வைப்பதும் உண்மையே
அல்லிக் குளத்தில் அளவெடுத்தேன் --அழகினை
ரசித்திட ஒளிந்து நின்றேன்
துள்ளித் துடிக்குது அவளழகு --அதனை
தொட்டுச் சுவைப்பது தனியழகு
சிரிக்கும் சப்தமோ மணியோசை --நான்
தினமும் பார்த்திடப் பேராசை
விரித்த மலர்போல் பொன்மேனி --இவளை
விரும்பி வராதவன் தவஞானி
கால்களில் சலங்கை கலவையிடும் --உடன்
கண்டவர் மனமோ குலவையிடும்
வேலினை யொத்த விழியானாள் --எனோ
விரும்பிய நான்மட்டும் பழியானேன்
கன்னி மீண்டும் வருவாளா --தூய
காதலை என்னிடம் தருவாளா
எண்ணிக் கலங்கியே ஏங்குகிறேன் --அவளை
இதயத்தில் வைத்துத் தாங்குகிறேன்
காலம் எனக்கும் கை கொடுக்கும் -அவளது
கருவிழி என்னையே வட்டமிடும்
ஞாலம் என்பது உள்ளவரை --இங்கு
நாங்கள் இணைவது பள்ளியறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக