பல்லவி
கனிந்தருள் புரிகுவாய் கந்தனெனும் வேலா --உனது
காலடி பணிந்தேன் நானும் பல நாளா (கனி )
அனுபல்லவி
மனதினில் கோவிலை உனக்காய் அமைத்தேன் --அதில்
மகிழ்வுடன் அமர்ந்திட உன்னை நான் அழைத்தேன் (கனி )
சரணங்கள்
இனியென்ன குறைகள் எனக்கிந்த உலகிலே --எம்
இறைவனே நீயின்றி யாருண்டு உறவிலே
துணையென வருகின்ற தூயவன் நீ அன்றோ --தினம்
திருப்புகழ் ஓதுதல் நான் செய்யும் தவம் ஒன்றே (கனி )
கருணையைப் பொழிபவன் கலைகளில் சிறந்தவன் --ஏழை
கண்களில் நிறைந்தவன் காட்சியில் எளியவன்
அருமையில் அரியவன் அருள்தனை அருள்பவன் --நல்ல
ஆனந்தம் கொடுப்பவன் நமது அன்பிற்கு உரியவன் (கனி )
மனதினில் நினைத்தால் மயிலினில் வருபவன் --நம்
மனைகளில் செல்வம் மகிழ்வினைத் தருபவன்
இனியவன் முருகன் எங்கள் ஈசனின் திருமகன் --என்றும்
இவன் பெயர் கூறிட தேனினும் இனிப்பவன் (கனி )
மங்களப் பொருளாய் மனைகளில் வசிப்பவன் --நம்
மங்கையர் வணங்கும் குங்கும நிறத்தவன்
சங்கடம் தீர்ப்பவன் நம் சரவணப் பெருமகன் --அவன்
சன்னதி சென்றால் சகல நலமும் அளிப்பவன் (கனி )
கனிந்தருள் புரிகுவாய் கந்தனெனும் வேலா --உனது
காலடி பணிந்தேன் நானும் பல நாளா (கனி )
அனுபல்லவி
மனதினில் கோவிலை உனக்காய் அமைத்தேன் --அதில்
மகிழ்வுடன் அமர்ந்திட உன்னை நான் அழைத்தேன் (கனி )
சரணங்கள்
இனியென்ன குறைகள் எனக்கிந்த உலகிலே --எம்
இறைவனே நீயின்றி யாருண்டு உறவிலே
துணையென வருகின்ற தூயவன் நீ அன்றோ --தினம்
திருப்புகழ் ஓதுதல் நான் செய்யும் தவம் ஒன்றே (கனி )
கருணையைப் பொழிபவன் கலைகளில் சிறந்தவன் --ஏழை
கண்களில் நிறைந்தவன் காட்சியில் எளியவன்
அருமையில் அரியவன் அருள்தனை அருள்பவன் --நல்ல
ஆனந்தம் கொடுப்பவன் நமது அன்பிற்கு உரியவன் (கனி )
மனதினில் நினைத்தால் மயிலினில் வருபவன் --நம்
மனைகளில் செல்வம் மகிழ்வினைத் தருபவன்
இனியவன் முருகன் எங்கள் ஈசனின் திருமகன் --என்றும்
இவன் பெயர் கூறிட தேனினும் இனிப்பவன் (கனி )
மங்களப் பொருளாய் மனைகளில் வசிப்பவன் --நம்
மங்கையர் வணங்கும் குங்கும நிறத்தவன்
சங்கடம் தீர்ப்பவன் நம் சரவணப் பெருமகன் --அவன்
சன்னதி சென்றால் சகல நலமும் அளிப்பவன் (கனி )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக