வண்ணக் கலவைகள்
எண்ணக் குவியல்கள்
என்னை இழுக்குதடி -மனம்
எங்கோ பறக்குதடி
மின்னல் ஒளியினில்
மேகக் குமுறலில்
பின்னி இழுக்குதடி -ஏனோ
பித்தம் பிடிக்குதடி
சில்லெனும் காற்றிலே
சீதள நிலவிலே
மெல்ல அணைக்குதடி -எனது
மேனி கொதிக்குதடி
வெட்ட வெளியினில்
கட்டிப் பிடித்துமே
தொட்டிட நினைக்குதடி -காதல்
தோன்றி அழைக்குதடி
துணைவனை வேண்டியே
துடிக்குது என்நெஞ்சம்
கணைகளும் பாய்ந்ததடி -மாறன்
கைபட்டு ஏறுதடி
விம்மித் தணிவதும்
விரகம் அடைவதும்
கன்னிப் பருவத்திலா -அன்றி
களவி மோகத்திலா
ஒன்றுக்குள் ஒன்றென
உவகையில் நன்றென
அன்றைக்கே சொல்லினரே -நாமும்
அதன்வழி வாழ்ந்திடுவோம்
எண்ணக் குவியல்கள்
என்னை இழுக்குதடி -மனம்
எங்கோ பறக்குதடி
மின்னல் ஒளியினில்
மேகக் குமுறலில்
பின்னி இழுக்குதடி -ஏனோ
பித்தம் பிடிக்குதடி
சில்லெனும் காற்றிலே
சீதள நிலவிலே
மெல்ல அணைக்குதடி -எனது
மேனி கொதிக்குதடி
வெட்ட வெளியினில்
கட்டிப் பிடித்துமே
தொட்டிட நினைக்குதடி -காதல்
தோன்றி அழைக்குதடி
துணைவனை வேண்டியே
துடிக்குது என்நெஞ்சம்
கணைகளும் பாய்ந்ததடி -மாறன்
கைபட்டு ஏறுதடி
விம்மித் தணிவதும்
விரகம் அடைவதும்
கன்னிப் பருவத்திலா -அன்றி
களவி மோகத்திலா
ஒன்றுக்குள் ஒன்றென
உவகையில் நன்றென
அன்றைக்கே சொல்லினரே -நாமும்
அதன்வழி வாழ்ந்திடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக