புதன், 2 ஜூலை, 2014

கன்னிப்பருவம் 251.

வண்ணக்    கலவைகள்
 எண்ணக்    குவியல்கள்
 என்னை    இழுக்குதடி -மனம்
 எங்கோ     பறக்குதடி

 மின்னல்    ஒளியினில்
 மேகக்       குமுறலில்
 பின்னி     இழுக்குதடி -ஏனோ
 பித்தம்     பிடிக்குதடி

 சில்லெனும்    காற்றிலே
 சீதள        நிலவிலே
 மெல்ல   அணைக்குதடி -எனது
 மேனி     கொதிக்குதடி

 வெட்ட    வெளியினில்
 கட்டிப்     பிடித்துமே
 தொட்டிட  நினைக்குதடி -காதல்
 தோன்றி    அழைக்குதடி

 துணைவனை   வேண்டியே
 துடிக்குது    என்நெஞ்சம்
 கணைகளும்   பாய்ந்ததடி -மாறன்
 கைபட்டு      ஏறுதடி

 விம்மித்    தணிவதும்
 விரகம்    அடைவதும்
 கன்னிப்    பருவத்திலா -அன்றி
 களவி     மோகத்திலா

 ஒன்றுக்குள்   ஒன்றென
 உவகையில்   நன்றென
 அன்றைக்கே     சொல்லினரே -நாமும்
 அதன்வழி         வாழ்ந்திடுவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக