ஞாயிறு, 13 ஜூலை, 2014

தோணி 271

இளமாலைப்     பொழுது -நல்
 எழில் கொஞ்சும்    உருவில்
 கலைமானைப்    போன்றாள் -என்
 கண்களில்    தெரிந்தாள்

 ஊரென்ன     என்றேன் -அவள்
 உறவென்று   சொன்னாள்
 பேரென்ன     என்றேன் -அவளோ -
 பெம்மானே    என்றாள்

 கண்ணாலே    அளந்தாள் -காதல்
  பயிர்        வளர்த்தாள்
 எந்நாளும்     மனதில் -புதிய
 இடமொன்று   பிடித்தாள்

 பொன்னான     மேனி -பூவில்
 வரும்       தேனீ
 என்னாசைத்    தோணி -இன்பம்
 பொங்கும்    கேணி

 சலசலக்கும்     ஓடை -அவளோடு
 சதிராடி      நடக்கும்
 வெலவெலத்துப்    போனேன் -நானோ
 வெறியனும்     ஆனேன்

 மணந்தால்     அவளையே மணப்பேன் -பெரும்
 மகிழ்வினிலே    திளைப்பேன்
 தினம்தோறும்    துதிப்பேன் -இதழ்
  தேனையள்ளிக்     குடிப்பேன்

 கலைவண்ண    மேடை -அவள்
 காமம்  நிறைப்     பேழை
 சிலைபோன்ற     உருவம் -அதில்
 சிந்துகின்ற     பருவம்

 விழிவீச்சில்     கொன்றாள் -காதல்
  விரகத்தை     வளர்த்தாள்
 பழிதீர்க்க    வந்தாள் -என்னைப்
 பஞ்சாக     துவைத்தாள்

 புனலாக     வந்தாள் -என்னை
 புலன்மாற்றிப்     போட்டாள்
 தணலாகி     வெந்தேன் -இதய
 தாகத்தில்     நொந்தேன்

 காதலிலே    விழுந்தேன் -அவள்
 கண்ணசைவில்     எழுந்தேன்
 ஆதலினால்    உலகீர் -முடிவில்
  அழகியினை     மணந்தேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக