இளமாலைப் பொழுது -நல்
எழில் கொஞ்சும் உருவில்
கலைமானைப் போன்றாள் -என்
கண்களில் தெரிந்தாள்
ஊரென்ன என்றேன் -அவள்
உறவென்று சொன்னாள்
பேரென்ன என்றேன் -அவளோ -
பெம்மானே என்றாள்
கண்ணாலே அளந்தாள் -காதல்
பயிர் வளர்த்தாள்
எந்நாளும் மனதில் -புதிய
இடமொன்று பிடித்தாள்
பொன்னான மேனி -பூவில்
வரும் தேனீ
என்னாசைத் தோணி -இன்பம்
பொங்கும் கேணி
சலசலக்கும் ஓடை -அவளோடு
சதிராடி நடக்கும்
வெலவெலத்துப் போனேன் -நானோ
வெறியனும் ஆனேன்
மணந்தால் அவளையே மணப்பேன் -பெரும்
மகிழ்வினிலே திளைப்பேன்
தினம்தோறும் துதிப்பேன் -இதழ்
தேனையள்ளிக் குடிப்பேன்
கலைவண்ண மேடை -அவள்
காமம் நிறைப் பேழை
சிலைபோன்ற உருவம் -அதில்
சிந்துகின்ற பருவம்
விழிவீச்சில் கொன்றாள் -காதல்
விரகத்தை வளர்த்தாள்
பழிதீர்க்க வந்தாள் -என்னைப்
பஞ்சாக துவைத்தாள்
புனலாக வந்தாள் -என்னை
புலன்மாற்றிப் போட்டாள்
தணலாகி வெந்தேன் -இதய
தாகத்தில் நொந்தேன்
காதலிலே விழுந்தேன் -அவள்
கண்ணசைவில் எழுந்தேன்
ஆதலினால் உலகீர் -முடிவில்
அழகியினை மணந்தேன்
எழில் கொஞ்சும் உருவில்
கலைமானைப் போன்றாள் -என்
கண்களில் தெரிந்தாள்
ஊரென்ன என்றேன் -அவள்
உறவென்று சொன்னாள்
பேரென்ன என்றேன் -அவளோ -
பெம்மானே என்றாள்
கண்ணாலே அளந்தாள் -காதல்
பயிர் வளர்த்தாள்
எந்நாளும் மனதில் -புதிய
இடமொன்று பிடித்தாள்
பொன்னான மேனி -பூவில்
வரும் தேனீ
என்னாசைத் தோணி -இன்பம்
பொங்கும் கேணி
சலசலக்கும் ஓடை -அவளோடு
சதிராடி நடக்கும்
வெலவெலத்துப் போனேன் -நானோ
வெறியனும் ஆனேன்
மணந்தால் அவளையே மணப்பேன் -பெரும்
மகிழ்வினிலே திளைப்பேன்
தினம்தோறும் துதிப்பேன் -இதழ்
தேனையள்ளிக் குடிப்பேன்
கலைவண்ண மேடை -அவள்
காமம் நிறைப் பேழை
சிலைபோன்ற உருவம் -அதில்
சிந்துகின்ற பருவம்
விழிவீச்சில் கொன்றாள் -காதல்
விரகத்தை வளர்த்தாள்
பழிதீர்க்க வந்தாள் -என்னைப்
பஞ்சாக துவைத்தாள்
புனலாக வந்தாள் -என்னை
புலன்மாற்றிப் போட்டாள்
தணலாகி வெந்தேன் -இதய
தாகத்தில் நொந்தேன்
காதலிலே விழுந்தேன் -அவள்
கண்ணசைவில் எழுந்தேன்
ஆதலினால் உலகீர் -முடிவில்
அழகியினை மணந்தேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக