பூவார் சோலை நடுவில் -நான்
பொன்மேனி கண்டேன்
சேலார் விழியால் -ஏனோ
சிறையில் அடைத்தாள்
கண்ணால் அழைத்தாள் -புது
கவிதை படைத்தாள்
பின்னால் சென்றேன் -அதனால்
பேச்சை இழந்தேன்
இரவில் வதைத்தாள் -வீணே
எள்ளியே நகைத்தாள்
உறவை மறந்தேன் -வாழும்
ஊரைத் துறந்தேன்
அன்னம் வெறுத்தேன் -மன
அமைதி தொலைத்தேன்
எண்ணம் கலைத்தாள் -என்
இதயம் குடைந்தாள்
பின்னல் சடையால் -எனைப்
பின்னி இழுத்தாள்
கன்னம் வைத்தாள் -உள்ளம்
கவர்ந்து சென்றாள்
வாழ்வு வருமா -அவளால்
வருத்தம் மிகுமோ
வேலன் கருணை -எனக்கு
வெற்றி தருமோ
பொன்மேனி கண்டேன்
சேலார் விழியால் -ஏனோ
சிறையில் அடைத்தாள்
கண்ணால் அழைத்தாள் -புது
கவிதை படைத்தாள்
பின்னால் சென்றேன் -அதனால்
பேச்சை இழந்தேன்
இரவில் வதைத்தாள் -வீணே
எள்ளியே நகைத்தாள்
உறவை மறந்தேன் -வாழும்
ஊரைத் துறந்தேன்
அன்னம் வெறுத்தேன் -மன
அமைதி தொலைத்தேன்
எண்ணம் கலைத்தாள் -என்
இதயம் குடைந்தாள்
பின்னல் சடையால் -எனைப்
பின்னி இழுத்தாள்
கன்னம் வைத்தாள் -உள்ளம்
கவர்ந்து சென்றாள்
வாழ்வு வருமா -அவளால்
வருத்தம் மிகுமோ
வேலன் கருணை -எனக்கு
வெற்றி தருமோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக