செவ்வாய், 8 ஜூலை, 2014

அன்னம் 264.

பூவார் சோலை     நடுவில் -நான்
 பொன்மேனி     கண்டேன்
 சேலார்     விழியால் -ஏனோ
 சிறையில்     அடைத்தாள்

 கண்ணால்     அழைத்தாள் -புது
 கவிதை     படைத்தாள்
 பின்னால்     சென்றேன் -அதனால்
 பேச்சை     இழந்தேன்

 இரவில்     வதைத்தாள் -வீணே
 எள்ளியே  நகைத்தாள்
 உறவை     மறந்தேன் -வாழும்
 ஊரைத்     துறந்தேன்

 அன்னம்     வெறுத்தேன் -மன
 அமைதி     தொலைத்தேன்
 எண்ணம்     கலைத்தாள் -என்
 இதயம்         குடைந்தாள்

 பின்னல்     சடையால் -எனைப்
 பின்னி     இழுத்தாள்
 கன்னம்     வைத்தாள் -உள்ளம்
 கவர்ந்து     சென்றாள்

 வாழ்வு     வருமா -அவளால்
 வருத்தம்     மிகுமோ
 வேலன்     கருணை -எனக்கு
 வெற்றி     தருமோ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக