வெள்ளி, 4 ஜூலை, 2014

உயிரே 254.

நானாய்    இருந்தேன் 
 நலமே    புரிந்தேன் 
 தேனாய்  வந்தாய் 
 தினமும்  தொழுதேன் 
 
 கண்ணால்  அழைத்தேன் 
 கடிதம்    கொடுத்தேன் 
 பின்னால்  அலைந்தேன் 
 பொறுமை  இழந்தேன் 
 
 வருவாய்   என்றேன் 
 வளமை  குறைந்தேன் 
 தருவாய்  சொன்னேன் 
 தனியாய்  நின்றேன் 
 
 என்னைக்  கொன்றாய் 
 எதற்கோ  மறுத்தாய் 
 மானே   என்றேன் 
 மயக்கம்  அடைந்தேன் 
 
 இணைவோம்  என்றேன் 
 எனக்கில்லை  அறிந்தேன் 
 உறவாய்    கொண்டேன் 
 உரிமை   துறந்தேன் 
 
 இரவா    பகலா 
 இதுவா  எதுவா 
 உறவா   பிரிவா 
 உயிரே  சொல்லு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக