புதன், 16 ஜூலை, 2014

காதல் சின்னம் 277.

மாலை    வந்தானடி -தோழி
 மயக்கம்    தந்தானடி
 சோலை    புகுந்தானடி -நானும்
 சொக்கிக்    கிடந்தேனடி

 வாரியே     அணைத்தானடி -ஏனோ
 வளைந்து    கொடுத்தேனடி
 கூறிடத்    தெரியவில்லை -அந்த
 குமரன்    செய்த லீலை

 கன்னம்    சிவப்பானது -இரு
 கண்கள்    வெளுப்பானது
 சின்னம்    உருவானது -எனது
 ஜீவன்      பறி போனது

 மயக்கம்    தலையேருது -அவனையே
 மணக்கும்    நிலையானது
 தயக்கம்    பறந்தோடுது -மீண்டும்
 தழுவிட    நினைவாகுது

 உள்ளம்    கொதிப்பானது -இந்த
 ஊரே    வெறுப்பானது
 வெல்லம்    கசப்பானது -அடியே
 வேம்பும்    இனிப்பானது

 இளமை    அழகானது -பெற்ற
 இன்பம்    சுகமானது
 ஏக்கம்    பெரிதானது -அவனை
 எண்ணித்    தடுமாறுது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக