மாலை வந்தானடி -தோழி
மயக்கம் தந்தானடி
சோலை புகுந்தானடி -நானும்
சொக்கிக் கிடந்தேனடி
வாரியே அணைத்தானடி -ஏனோ
வளைந்து கொடுத்தேனடி
கூறிடத் தெரியவில்லை -அந்த
குமரன் செய்த லீலை
கன்னம் சிவப்பானது -இரு
கண்கள் வெளுப்பானது
சின்னம் உருவானது -எனது
ஜீவன் பறி போனது
மயக்கம் தலையேருது -அவனையே
மணக்கும் நிலையானது
தயக்கம் பறந்தோடுது -மீண்டும்
தழுவிட நினைவாகுது
உள்ளம் கொதிப்பானது -இந்த
ஊரே வெறுப்பானது
வெல்லம் கசப்பானது -அடியே
வேம்பும் இனிப்பானது
இளமை அழகானது -பெற்ற
இன்பம் சுகமானது
ஏக்கம் பெரிதானது -அவனை
எண்ணித் தடுமாறுது
மயக்கம் தந்தானடி
சோலை புகுந்தானடி -நானும்
சொக்கிக் கிடந்தேனடி
வாரியே அணைத்தானடி -ஏனோ
வளைந்து கொடுத்தேனடி
கூறிடத் தெரியவில்லை -அந்த
குமரன் செய்த லீலை
கன்னம் சிவப்பானது -இரு
கண்கள் வெளுப்பானது
சின்னம் உருவானது -எனது
ஜீவன் பறி போனது
மயக்கம் தலையேருது -அவனையே
மணக்கும் நிலையானது
தயக்கம் பறந்தோடுது -மீண்டும்
தழுவிட நினைவாகுது
உள்ளம் கொதிப்பானது -இந்த
ஊரே வெறுப்பானது
வெல்லம் கசப்பானது -அடியே
வேம்பும் இனிப்பானது
இளமை அழகானது -பெற்ற
இன்பம் சுகமானது
ஏக்கம் பெரிதானது -அவனை
எண்ணித் தடுமாறுது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக