செவ்வாய், 22 ஜூலை, 2014

பாடங்கள் 293.

உலகம்    படைத்தான்    ஒருவன் -அவன்
 உயரத்தில்    மறைவாய்    இருப்பான்
 கலக்கம்    சூழ்ந்திடும்    காலம் -வீசும்
 காற்றிலும்   கலப்பதவன்    கோலம்

 நீர் நிலைகளில்   என்றுமே    இருப்பான் -நீ
 நினைத்திடில்    மனதிலும்    வசிப்பான்
 போரிலும்    நீதிகள்    உரைப்பான் -அவன்
 பொங்கினால்    உலகத்தையே    கரைப்பான்

 ஏழைக்கு     இரங்குதல்    அவனே -நம்
 இதயத்தை    திறப்பதும்    அவனே
 சோலையில்    வருவான்    காற்றாய் -நற்
 சுகம் மட்டும்     விரும்பினால்    தோற்றாய்

 இரக்கத்தை    நெஞ்சிலே    கொள்ளு -மனதில்
 இருந்திடும்    தீமையைத்    தள்ளு
 உறக்கத்தை    தள்ளியே    எழுவாய் -அது
 உனக்குத்    தந்திடும்    வருவாய்

 பள்ளமும்    மேடாய்    மாறும் -வீண்
 பகையிலும்    நட்பொன்று    ஊறும்
 நல்லவை    என்றுமே    வெல்லும் -அது
 நமக்குப்    புது பாடங்கள்    சொல்லும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக