உலகம் படைத்தான் ஒருவன் -அவன்
உயரத்தில் மறைவாய் இருப்பான்
கலக்கம் சூழ்ந்திடும் காலம் -வீசும்
காற்றிலும் கலப்பதவன் கோலம்
நீர் நிலைகளில் என்றுமே இருப்பான் -நீ
நினைத்திடில் மனதிலும் வசிப்பான்
போரிலும் நீதிகள் உரைப்பான் -அவன்
பொங்கினால் உலகத்தையே கரைப்பான்
ஏழைக்கு இரங்குதல் அவனே -நம்
இதயத்தை திறப்பதும் அவனே
சோலையில் வருவான் காற்றாய் -நற்
சுகம் மட்டும் விரும்பினால் தோற்றாய்
இரக்கத்தை நெஞ்சிலே கொள்ளு -மனதில்
இருந்திடும் தீமையைத் தள்ளு
உறக்கத்தை தள்ளியே எழுவாய் -அது
உனக்குத் தந்திடும் வருவாய்
பள்ளமும் மேடாய் மாறும் -வீண்
பகையிலும் நட்பொன்று ஊறும்
நல்லவை என்றுமே வெல்லும் -அது
நமக்குப் புது பாடங்கள் சொல்லும்
உயரத்தில் மறைவாய் இருப்பான்
கலக்கம் சூழ்ந்திடும் காலம் -வீசும்
காற்றிலும் கலப்பதவன் கோலம்
நீர் நிலைகளில் என்றுமே இருப்பான் -நீ
நினைத்திடில் மனதிலும் வசிப்பான்
போரிலும் நீதிகள் உரைப்பான் -அவன்
பொங்கினால் உலகத்தையே கரைப்பான்
ஏழைக்கு இரங்குதல் அவனே -நம்
இதயத்தை திறப்பதும் அவனே
சோலையில் வருவான் காற்றாய் -நற்
சுகம் மட்டும் விரும்பினால் தோற்றாய்
இரக்கத்தை நெஞ்சிலே கொள்ளு -மனதில்
இருந்திடும் தீமையைத் தள்ளு
உறக்கத்தை தள்ளியே எழுவாய் -அது
உனக்குத் தந்திடும் வருவாய்
பள்ளமும் மேடாய் மாறும் -வீண்
பகையிலும் நட்பொன்று ஊறும்
நல்லவை என்றுமே வெல்லும் -அது
நமக்குப் புது பாடங்கள் சொல்லும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக