புதன், 16 ஜூலை, 2014

வேலன் கருணை 280.

கண்ணின்    கருமணியே   கண்ணம்மா
 கற்பகப்      பூந்தேனே
 என்னில்    கலந்தவளே   கண்ணம்மா
 ஏக்கம்    நிறைய    வைத்தாய்

 உன்னை    நினைத்தன்றோ   கண்ணம்மா
 உருகித்    தவிக்கின்றேன்
 விண்ணில்    மறைந்தாயோ   கண்ணம்மா
 வேதனை    மீறுதடி

 சோலை    நடுவினிலே    கண்ணம்மா
 சொக்கித்    திரிந்தோமே
 வேளை    வந்ததென    கண்ணம்மா
 விரைந்து    எங்கே    சென்றாய்

 கொட்டும்    மழையினிலும்   கண்ணம்மா
 கொஞ்சி    மகிழ்வோமே
 விட்டுப்     பிரிந்தாயே    கண்ணம்மா
 விரகம்    சூழுதடி

 ஆற்றில்    குடிநீரை    கண்ணம்மா
 நான்   அள்ளிக்    குடிக்கையிலே
 பூத்து ச்    சிரிப்பாயே    கண்ணம்மா
 உன் புன்னகை    கொல்லுதடி

 வெட்ட     வெளியினிலே   கண்ணம்மா
 விடியும்    நேரம்    தொட்டு
 கட்டிப்    பிடிப்போமே    கண்ணம்மா
 கண்கள்     குளமானதடி

 வாழும்    காலம்    வரை   கண்ணம்மா
 வருவாய்    என்றே    நினைப்பேன்
 வேலன்    கருணையினால்   கண்ணம்மா
 விரும்பி    நீயே    வருவாய் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக