வியாழன், 31 ஜூலை, 2014

தோழன் 312.

வருவாய்    முருகா
 வடிவேல் அழகா
 உனையே    நினைவேன்
 உயிரில்    கலப்பேன்

 கனவில்    மறவேன்
 காலடி    தொழுவேன்
 இனியும்    பிரியேன்
 எனை நீ    காப்பாய்

 மனைவியர்    இருவருடன்
 ம யில்    மீதில்  ஏறி
 சோதனை    நீங்கிட
 சண்முகா    வருகவே

 தமிழாய்     வந்தாய்
 தணிகையில்    நின்றாய்
 கனிக்காக    கந்தா
 கடுங்கோபம்    கொண்டாய்

 குன்றினில்    ஆடி
 குறைகளைச்    சாடி
 என்றும்    நீதான்
 ஏழையின்    தோழன்

 அன்னை    உமையவள்
 அன்புச்    செல்வா
  ஆனை முகம்    தம்பி
 ஆறுமுகமும்    நீயே

 முன்னைப்    பொருளே
 மோகன    நிலவே
 உன்னைப்    பணிவோர்
 உன்னதம்    பெறுவார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக