வியாழன், 31 ஜூலை, 2014

புதுக் கவிதை 313*

மாலைப்    பொழுது -நல்ல
 மயக்கத்தை    ஏற்றும்
 மன்னவன்    நினைவு -என்
 மனதினில்    ஊறும்

 சோலையில்    தென்றல் -இன்னும்
 சுகமாய்    வீசும்
 சுந்தரன்    பெருமை -தினம்
 சொல்லியே    பேசும்

 துணையென    வந்தான் -இளம்
 தோளினைத்    தொட்டான்
 கணைதனை    விடுத்தான் -நானும்
 காதலில்    வீழ்ந்தேன்

 இனிமைச்    சிறையினில் -தள்ளி
 என்னையே    அடைத்தான்
 ஈரேழு     உலகங்கள் -எந்தனை
 இட்டுமே    சென்றான்

 இனிவரும்    நாளில் -அவன்
 என்னிடம்    வருவான்
 துணைவனின்    துணையால் -புதிய
 சொர்க்கமும்    காண்பேன்

 கனிதரும்    சுவைதனை -இந்த
 காதலில்    ருசிப்பேன்
 கண்கள்    மயங்கிட -புதுக்
 கவிதைகள்    படிப்பேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக