கடலிலே முத்திருக்கு -நமக்கு
காசு சேர வழியிருக்கு
உடலிலே வலுவிருக்கு செல்லையா
உழைப்பதிலே சுகமிருக்கு சொல்லையா
வரவிலே செலவிருக்கு -மண்ணில்
வாழவே தொழிலிருக்கு
உறவிலே மகிழ்விருக்கு என்னய்யா
ஒற்றுமையாய் வாழணுமே கன்னையா
இன்பங்களும் துன்பங்களும் -உலகில்
ஏற்றங்களும் பள்ளம்களும்
இருப்பது சகஜம்தானே முத்தையா
ஏற்றிடணும் நமக்கது சொத்தையா
நாளை நல்ல நாளென்று -நீயும்
நம்பிக்கையில் காத்திருப்பாய்
வேளைவந்தால் விடியுமடா வீரய்யா
வெற்றியுண்டு கவலைஏனோ கூறையா
அழுதவர் சிரிப்பதுண்டு -என்றும்
அமைதியிலே இன்பமுண்டு
விழுதுகளாய் மாறிவிடு வேலையா
வேண்டும்புகழ் சேர்ந்திடுமே சோலையா
பெண்கள் வாழ பாடுபடு -பிறரை
பெருமையாலே வென்றுவிடு
கண்களாக மதித்துவிடு கந்தையா
கருணையோடு வாழ்ந்து விடு கருப்பையா
காசு சேர வழியிருக்கு
உடலிலே வலுவிருக்கு செல்லையா
உழைப்பதிலே சுகமிருக்கு சொல்லையா
வரவிலே செலவிருக்கு -மண்ணில்
வாழவே தொழிலிருக்கு
உறவிலே மகிழ்விருக்கு என்னய்யா
ஒற்றுமையாய் வாழணுமே கன்னையா
இன்பங்களும் துன்பங்களும் -உலகில்
ஏற்றங்களும் பள்ளம்களும்
இருப்பது சகஜம்தானே முத்தையா
ஏற்றிடணும் நமக்கது சொத்தையா
நாளை நல்ல நாளென்று -நீயும்
நம்பிக்கையில் காத்திருப்பாய்
வேளைவந்தால் விடியுமடா வீரய்யா
வெற்றியுண்டு கவலைஏனோ கூறையா
அழுதவர் சிரிப்பதுண்டு -என்றும்
அமைதியிலே இன்பமுண்டு
விழுதுகளாய் மாறிவிடு வேலையா
வேண்டும்புகழ் சேர்ந்திடுமே சோலையா
பெண்கள் வாழ பாடுபடு -பிறரை
பெருமையாலே வென்றுவிடு
கண்களாக மதித்துவிடு கந்தையா
கருணையோடு வாழ்ந்து விடு கருப்பையா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக