செவ்வாய், 8 ஜூலை, 2014

கருணை 263.

கடலிலே     முத்திருக்கு -நமக்கு
 காசு  சேர     வழியிருக்கு
 உடலிலே     வலுவிருக்கு செல்லையா
 உழைப்பதிலே   சுகமிருக்கு சொல்லையா

 வரவிலே     செலவிருக்கு -மண்ணில்
 வாழவே      தொழிலிருக்கு
 உறவிலே     மகிழ்விருக்கு  என்னய்யா
 ஒற்றுமையாய்    வாழணுமே  கன்னையா

 இன்பங்களும்   துன்பங்களும் -உலகில்
 ஏற்றங்களும்    பள்ளம்களும்
 இருப்பது     சகஜம்தானே  முத்தையா
 ஏற்றிடணும்    நமக்கது    சொத்தையா

 நாளை     நல்ல நாளென்று -நீயும்
 நம்பிக்கையில்    காத்திருப்பாய்
 வேளைவந்தால்    விடியுமடா  வீரய்யா
 வெற்றியுண்டு     கவலைஏனோ  கூறையா

 அழுதவர்      சிரிப்பதுண்டு -என்றும்
 அமைதியிலே     இன்பமுண்டு
 விழுதுகளாய்     மாறிவிடு  வேலையா
 வேண்டும்புகழ்  சேர்ந்திடுமே   சோலையா

 பெண்கள் வாழ     பாடுபடு -பிறரை
 பெருமையாலே  வென்றுவிடு
 கண்களாக      மதித்துவிடு  கந்தையா
 கருணையோடு     வாழ்ந்து விடு  கருப்பையா  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக