வண்டுகள் மலர்களை நாடின -சுற்றி
வசந்த கீதங்கள் பாடின
உண்டென அதிலுள்ள தேனையே -மீண்டும்
ஓடியே வந்திடும் நாளையே
காற்றினில் செடிகள் ஆடின -அவை
காதல் பாட்டினைப் பாடின
ஏற்றத்தில் மாடுகள் இறைத்தன -தண்ணீர்
எல்லா வயலிற்கும் பாய்ந்தது
சேற்றினில் கால்கள் அலைந்தன -கைகள்
திறம்பட நாற்றினை நட்டன
காற்றிற்கும் கருணை பிறந்தது -அது
காலத்தில் பெருமழை பெய்தது
கதிர்கள் வளர்ந்திடத் தொடங்கின -நம்
கண்களில் நெல்மணி தெரிந்தன
களையினை எடுத்தனர் காலத்தில் -நெல்
கண்களைப் பறித்தன ஜாலத்தில்
அறுவைப் பணிகள் ஆரம்பம் -களத்தில்
அழகாய் உதிர்ந்தன நெல்மணிகளும்
உழவர் உழைப்பு வெற்றியே -அவரை
விரும்பி நன்மைகள் செய்குவோம்
உணவு கொடுப்பவர் உழவர்கள் -நமது
உயிரைக் காப்பதும் அவர்களே
தினமும் உழவரைப் போற்றுவோம் -வீட்டிலே
தீபங்கள் நூற்றினை ஏற்றுவோம்
வசந்த கீதங்கள் பாடின
உண்டென அதிலுள்ள தேனையே -மீண்டும்
ஓடியே வந்திடும் நாளையே
காற்றினில் செடிகள் ஆடின -அவை
காதல் பாட்டினைப் பாடின
ஏற்றத்தில் மாடுகள் இறைத்தன -தண்ணீர்
எல்லா வயலிற்கும் பாய்ந்தது
சேற்றினில் கால்கள் அலைந்தன -கைகள்
திறம்பட நாற்றினை நட்டன
காற்றிற்கும் கருணை பிறந்தது -அது
காலத்தில் பெருமழை பெய்தது
கதிர்கள் வளர்ந்திடத் தொடங்கின -நம்
கண்களில் நெல்மணி தெரிந்தன
களையினை எடுத்தனர் காலத்தில் -நெல்
கண்களைப் பறித்தன ஜாலத்தில்
அறுவைப் பணிகள் ஆரம்பம் -களத்தில்
அழகாய் உதிர்ந்தன நெல்மணிகளும்
உழவர் உழைப்பு வெற்றியே -அவரை
விரும்பி நன்மைகள் செய்குவோம்
உணவு கொடுப்பவர் உழவர்கள் -நமது
உயிரைக் காப்பதும் அவர்களே
தினமும் உழவரைப் போற்றுவோம் -வீட்டிலே
தீபங்கள் நூற்றினை ஏற்றுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக