வியாழன், 3 ஜூலை, 2014

தீபங்கள் நூறு 252.

வண்டுகள்    மலர்களை   நாடின -சுற்றி
 வசந்த       கீதங்கள்     பாடின
 உண்டென    அதிலுள்ள    தேனையே -மீண்டும்
 ஓடியே    வந்திடும்    நாளையே

காற்றினில்   செடிகள்    ஆடின -அவை
 காதல்    பாட்டினைப்    பாடின
 ஏற்றத்தில்   மாடுகள்   இறைத்தன -தண்ணீர்
 எல்லா    வயலிற்கும்   பாய்ந்தது

 சேற்றினில்   கால்கள்   அலைந்தன -கைகள்
 திறம்பட   நாற்றினை    நட்டன
 காற்றிற்கும்   கருணை   பிறந்தது -அது
 காலத்தில்   பெருமழை   பெய்தது

 கதிர்கள்    வளர்ந்திடத்   தொடங்கின -நம்
 கண்களில்   நெல்மணி   தெரிந்தன
 களையினை   எடுத்தனர்   காலத்தில் -நெல்
 கண்களைப்   பறித்தன    ஜாலத்தில்

 அறுவைப்     பணிகள்    ஆரம்பம் -களத்தில்
 அழகாய்   உதிர்ந்தன    நெல்மணிகளும்
 உழவர்    உழைப்பு   வெற்றியே -அவரை
 விரும்பி    நன்மைகள்   செய்குவோம்

 உணவு    கொடுப்பவர்   உழவர்கள் -நமது
 உயிரைக்   காப்பதும்   அவர்களே
 தினமும்   உழவரைப்   போற்றுவோம் -வீட்டிலே
 தீபங்கள்   நூற்றினை    ஏற்றுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக