நாளை எண்ணியே
நம்பி வாழ்வேன்
வேளை வந்தால்
வெற்றியினைப் பெறுவேன்
கதிரின் ஒளியில்
கருணை வழியில்
புதிய முறைகள்
புகுத்திடப் பார்ப்பேன்
அன்பில் அணைத்து
அறிவை வளர்த்து
பண்பினில் நானும்
பழகிடத் துணிவேன்
எடுத்துக் கொடுத்து
இன்னலைத் துடைத்து
அடுத்துப் பிறர்க்கு
அள்ளித் தருவேன்
நானும் வளர்ந்து
நல்லவை நினைத்து
வானம் வரைக்கும்
வளர்ந்திட முனைவேன்
நம்பி வாழ்வேன்
வேளை வந்தால்
வெற்றியினைப் பெறுவேன்
கதிரின் ஒளியில்
கருணை வழியில்
புதிய முறைகள்
புகுத்திடப் பார்ப்பேன்
அன்பில் அணைத்து
அறிவை வளர்த்து
பண்பினில் நானும்
பழகிடத் துணிவேன்
எடுத்துக் கொடுத்து
இன்னலைத் துடைத்து
அடுத்துப் பிறர்க்கு
அள்ளித் தருவேன்
நானும் வளர்ந்து
நல்லவை நினைத்து
வானம் வரைக்கும்
வளர்ந்திட முனைவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக