உலகாளும் உமையவளே -என்றும்
உன்பாதம் பணிந்திடுவோம்
கலிகால நேரமம்மா -சற்று
கண்திறந்து பார்த்திடுவாய்
பலநூல்கள் பணிந்தேத்தும் -தினம்
பக்தகோடி கைகூப்பும்
நிலமாளும் தேவியம்மா - நாங்கள்
நினதருளைப் பாடுகிறோம்
ஆதியிலே வந்தவள் நீ -எங்கள்
ஆஸ்தான நாயகியே
ஜோதியாய் எரிபவளே -வரும்
தொல்லைகளைத் தீர்ப்பவளே
ஆர்ப்பரித்து நீஎழுந்தால் -உள்ள
அண்டமெல்லாம் கிடுகிடுக்கும்
போர்ப்படைகள் மிரண்டோடும் -வானில்
மின்னல் மழை வந்துவிடும்
சக்தியாய் நின்றவளே -சிவ
சங்கரியே திரிசூலி
புத்திதர வேண்டுகிறோம் -இந்த
புவனத்து ஈஸ்வரியே
சித்தர்கள் கூட்டம் -உன்னை
சிரம் சாய்த்து வணங்குமம்மா
உத்தமியே உலகாளும் நாயகியே --இங்கு
உன்னையன்றி காவலில்லை
உன்பாதம் பணிந்திடுவோம்
கலிகால நேரமம்மா -சற்று
கண்திறந்து பார்த்திடுவாய்
பலநூல்கள் பணிந்தேத்தும் -தினம்
பக்தகோடி கைகூப்பும்
நிலமாளும் தேவியம்மா - நாங்கள்
நினதருளைப் பாடுகிறோம்
ஆதியிலே வந்தவள் நீ -எங்கள்
ஆஸ்தான நாயகியே
ஜோதியாய் எரிபவளே -வரும்
தொல்லைகளைத் தீர்ப்பவளே
ஆர்ப்பரித்து நீஎழுந்தால் -உள்ள
அண்டமெல்லாம் கிடுகிடுக்கும்
போர்ப்படைகள் மிரண்டோடும் -வானில்
மின்னல் மழை வந்துவிடும்
சக்தியாய் நின்றவளே -சிவ
சங்கரியே திரிசூலி
புத்திதர வேண்டுகிறோம் -இந்த
புவனத்து ஈஸ்வரியே
சித்தர்கள் கூட்டம் -உன்னை
சிரம் சாய்த்து வணங்குமம்மா
உத்தமியே உலகாளும் நாயகியே --இங்கு
உன்னையன்றி காவலில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக