மரமாய் இருந்தால் -நிற்க
நிழலும் கிடைக்கும்
மகிழ்வாய் இருந்தால் -வந்த
சுகமும் நிலைக்கும்
தனியே இருந்தால் -உனக்கு
என்ன கிடைக்கும்
தனிமைச் சிறையில் -மனம்
உழன்றே தவிக்கும்
துணையுடன் இருந்தால் -உள்ள
தொல்லை குறையும்
தனியே பிரிந்தால் -இன்னும்
பல தவறுகள் நடக்கும்
கனியாய் இருந்தால் -வரும்
பசியை அடக்கும்
கனிவாய் நடந்தால் -நெஞ்சில்
கருணை மலரும்
நிதமும் நடக்க -நல்ல
வலிமை கிடைக்கும்
நிம்மதி நிலைத்திட -என்றும்
நேர்வழி உதவும்
தாயை மதித்தால் -உனது
தகுதிகள் உயரும்
வாய்மை வாழ்வினில் -சிறந்த
வழித்துணை ஆகும்
நிழலும் கிடைக்கும்
மகிழ்வாய் இருந்தால் -வந்த
சுகமும் நிலைக்கும்
தனியே இருந்தால் -உனக்கு
என்ன கிடைக்கும்
தனிமைச் சிறையில் -மனம்
உழன்றே தவிக்கும்
துணையுடன் இருந்தால் -உள்ள
தொல்லை குறையும்
தனியே பிரிந்தால் -இன்னும்
பல தவறுகள் நடக்கும்
கனியாய் இருந்தால் -வரும்
பசியை அடக்கும்
கனிவாய் நடந்தால் -நெஞ்சில்
கருணை மலரும்
நிதமும் நடக்க -நல்ல
வலிமை கிடைக்கும்
நிம்மதி நிலைத்திட -என்றும்
நேர்வழி உதவும்
தாயை மதித்தால் -உனது
தகுதிகள் உயரும்
வாய்மை வாழ்வினில் -சிறந்த
வழித்துணை ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக