திங்கள், 28 ஜூலை, 2014

வழித் துணை 307.

மரமாய்    இருந்தால் -நிற்க
 நிழலும்    கிடைக்கும்
 மகிழ்வாய்    இருந்தால் -வந்த
 சுகமும்    நிலைக்கும்

 தனியே    இருந்தால் -உனக்கு
 என்ன    கிடைக்கும்
 தனிமைச்    சிறையில் -மனம்
 உழன்றே    தவிக்கும்

 துணையுடன்    இருந்தால் -உள்ள
 தொல்லை    குறையும்
 தனியே    பிரிந்தால் -இன்னும்
 பல தவறுகள்    நடக்கும்

 கனியாய்    இருந்தால் -வரும்
 பசியை    அடக்கும்
 கனிவாய்    நடந்தால் -நெஞ்சில்
 கருணை    மலரும்

 நிதமும்    நடக்க -நல்ல
 வலிமை    கிடைக்கும்
 நிம்மதி    நிலைத்திட -என்றும்
 நேர்வழி    உதவும்

 தாயை    மதித்தால் -உனது
 தகுதிகள்    உயரும்
 வாய்மை    வாழ்வினில் -சிறந்த
 வழித்துணை    ஆகும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக