திங்கள், 28 ஜூலை, 2014

உயர்வு 306.

இரவும்    பகலும் -மாறி
 இங்கே    வருதல்  போல்
 இன்பம்    துன்பம் -நமக்கும்
 எங்கும்    உண்டு

 வரவும்    செலவும் -நம்
 வாழ்வினில்    வருமே
 வந்ததைக்    கண்டுமே -நீயும்
 வருந்துதல்    தவறு

 இறவாப்    புகழினை -உலகில்
 எய்திடப்    பாரு
 இருக்கும்    வரையில் -இங்கே
 பிறர்க்கென    வாழு

 உண்டு என்றிடில் -அதில்
 இல்லை கூட    இருப்பதுமுண்டு
 தொண்டு    புரிந்திடில் -வந்த
 துன்பம்    தூரமே

 மனதைத்    திறப்பாய் -வரும்
 மமதையை    மறப்பாய்
 குணத்தை    மதிப்பாய் -அன்பு
 பாசத்தை    நினைப்பாய்

 நன்றிஒன்றே    நாளும்  வெல்லும் -என்றும்
 நம்பிக்கையே    நல்லன     அளிக்கும்
 இன்று நினைப்பதை    நன்று முடிப்பாய் -இனி
 எல்லாம்    வல்ல    இறையை   துதிப்பாய்

 நலமாய்    சொன்னேன் -உலகில்
 நன்றாய்    வாழ்ந்திட
 உளமதில்    கொள்ளு -வாழ்வில்
 உயர்வினை    அள்ளு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக