இரவும் பகலும் -மாறி
இங்கே வருதல் போல்
இன்பம் துன்பம் -நமக்கும்
எங்கும் உண்டு
வரவும் செலவும் -நம்
வாழ்வினில் வருமே
வந்ததைக் கண்டுமே -நீயும்
வருந்துதல் தவறு
இறவாப் புகழினை -உலகில்
எய்திடப் பாரு
இருக்கும் வரையில் -இங்கே
பிறர்க்கென வாழு
உண்டு என்றிடில் -அதில்
இல்லை கூட இருப்பதுமுண்டு
தொண்டு புரிந்திடில் -வந்த
துன்பம் தூரமே
மனதைத் திறப்பாய் -வரும்
மமதையை மறப்பாய்
குணத்தை மதிப்பாய் -அன்பு
பாசத்தை நினைப்பாய்
நன்றிஒன்றே நாளும் வெல்லும் -என்றும்
நம்பிக்கையே நல்லன அளிக்கும்
இன்று நினைப்பதை நன்று முடிப்பாய் -இனி
எல்லாம் வல்ல இறையை துதிப்பாய்
நலமாய் சொன்னேன் -உலகில்
நன்றாய் வாழ்ந்திட
உளமதில் கொள்ளு -வாழ்வில்
உயர்வினை அள்ளு
இங்கே வருதல் போல்
இன்பம் துன்பம் -நமக்கும்
எங்கும் உண்டு
வரவும் செலவும் -நம்
வாழ்வினில் வருமே
வந்ததைக் கண்டுமே -நீயும்
வருந்துதல் தவறு
இறவாப் புகழினை -உலகில்
எய்திடப் பாரு
இருக்கும் வரையில் -இங்கே
பிறர்க்கென வாழு
உண்டு என்றிடில் -அதில்
இல்லை கூட இருப்பதுமுண்டு
தொண்டு புரிந்திடில் -வந்த
துன்பம் தூரமே
மனதைத் திறப்பாய் -வரும்
மமதையை மறப்பாய்
குணத்தை மதிப்பாய் -அன்பு
பாசத்தை நினைப்பாய்
நன்றிஒன்றே நாளும் வெல்லும் -என்றும்
நம்பிக்கையே நல்லன அளிக்கும்
இன்று நினைப்பதை நன்று முடிப்பாய் -இனி
எல்லாம் வல்ல இறையை துதிப்பாய்
நலமாய் சொன்னேன் -உலகில்
நன்றாய் வாழ்ந்திட
உளமதில் கொள்ளு -வாழ்வில்
உயர்வினை அள்ளு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக