வரவா செலவா
வாழ்வு சுகமா
வாழ்ந்து பாரடா -தம்பி
வார்த்தை கேளடா
வந்தவர் போனார்
போனவர் வந்தார்
வாழ்க்கை ரகசியம் -தம்பி
வாழ்ந்திடல் அவசியம்
எழுந்தார் நடந்தார்
எங்கோ மறைந்தார்
எதுவும் அறிவாரோ -தம்பி
இதயம் திறப்பாரோ
தானாய் வந்தார்
தலை கீழ் நடந்தார்
தனியாய் போவாரே -தம்பி
தத்துவம் அறிவாயே
தாண்டிக் குதித்தவர்
தண்ணியில் மிதந்தவர்
மாண்டிங்கு போனாரே -தம்பி
மமதை கொள்ளாதே
எல்லாம் தெரிந்தவர்
தொல்லை பட்டார்
இதனைநீ மறவாதே -தம்பி
இன்பம் நிலையாதே
பழியினைச் சொன்னவர்
பாழ்பட்டுப் போனார்
பாடம் அறிவாயே -தம்பி
பக்குவம் தெரிவாயே
ஆணாய்ப் பிறந்தவர்
ஆணவம் தவறு
அதனை உணர்வாயே -தம்பி
அவசரம் கூடாதே
நன்றி உள்ளவர்
நன்மையே பெறுவார்
நாயகன் வழியாகும் -தம்பி
நல்வழி ஜெயமாகும்
பெண்களைப் பழிப்போர்
பிறர் பொருள் பறிப்போர்
கண் கெட்டுப் போவாரே -தம்பி
கயமை கூடாதே
வாழ்வு சுகமா
வாழ்ந்து பாரடா -தம்பி
வார்த்தை கேளடா
வந்தவர் போனார்
போனவர் வந்தார்
வாழ்க்கை ரகசியம் -தம்பி
வாழ்ந்திடல் அவசியம்
எழுந்தார் நடந்தார்
எங்கோ மறைந்தார்
எதுவும் அறிவாரோ -தம்பி
இதயம் திறப்பாரோ
தானாய் வந்தார்
தலை கீழ் நடந்தார்
தனியாய் போவாரே -தம்பி
தத்துவம் அறிவாயே
தாண்டிக் குதித்தவர்
தண்ணியில் மிதந்தவர்
மாண்டிங்கு போனாரே -தம்பி
மமதை கொள்ளாதே
எல்லாம் தெரிந்தவர்
தொல்லை பட்டார்
இதனைநீ மறவாதே -தம்பி
இன்பம் நிலையாதே
பழியினைச் சொன்னவர்
பாழ்பட்டுப் போனார்
பாடம் அறிவாயே -தம்பி
பக்குவம் தெரிவாயே
ஆணாய்ப் பிறந்தவர்
ஆணவம் தவறு
அதனை உணர்வாயே -தம்பி
அவசரம் கூடாதே
நன்றி உள்ளவர்
நன்மையே பெறுவார்
நாயகன் வழியாகும் -தம்பி
நல்வழி ஜெயமாகும்
பெண்களைப் பழிப்போர்
பிறர் பொருள் பறிப்போர்
கண் கெட்டுப் போவாரே -தம்பி
கயமை கூடாதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக