புதன், 23 ஜூலை, 2014

புது வழி 296.

இறவா    மனிதர்
 இருப்பது    உண்டோ
 ஏழை    என்பார்
 இல்லாமல்    உலகோ

 நாளை    என்பது
 நம்பிக்கை   சரியா
 வேலை    தேடுவதே
 விடியலை    தருமா

 போனவர்    வருவார்
 வருபவர்    போவார்
 புரட்டி    மாற்றிட
 புதுவழி    உளதா
  கனி விழக்  காலம் 
 காத்தலைப்    போல
 இனிமேல்    நாமும்
 இருத்தலும்    தகுமா

 அலைகளை    அடக்கி
 ஆற்றலைப்    பெருக்கி
 விளைபொருள்    அதிகம்
 விழைதலும்    வருமா

 கதிரவன்    ஒளியினைக்
  கருத்தாய்    சேர்த்து
 புதுமை    வழிகளில்
 புறப்படல்    முறையோ

 இருப்பதைக்    கொண்டு
 சிறப்புடன்    வாழ்வோம்
 புல்லரை    எதிர்த்து
 பொங்கியே    எழுவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக