மானாடும் சோலையில் -ஒரு
மயிலாடக் கண்டேன்
மணவாளன் வந்தான் -ஏனோ
மயங்கியே நின்றேன்
எதோ ஒன்று சொல்லிட -அங்கு
அருகில் சென்றேன்
இயலாமல் தோழி -அன்று
எதற்கோ மறந்தேன்
கைகளால் தொட்டு -என்னை
கனிவாக இழுத்தான்
பெண்மையின் நாணம் -அவனிடம்
பிறகென்ன சொல்லும்
கண்களால் அளந்தோம் -எங்கள்
காதலை வளர்த்தோம்
எண்ணாமல் இணைந்தோம் -பின்பு
எங்கேயோ பறந்தோம்
மறவேன் என்றான் -இன்னும்
வரவே இல்லை
கனமான நெஞ்சமும் -வீணாய்க்
கலங்குதே தோழி
ஒருநாள் வருவான் -இனிமேல்
ஒன்றாகி வாழ்வோம்
திருநாள் அதுதான் -நீயும்
திடம் கொள் தோழி
மன்னன் வேண்டும் -அவனால்
மக்களும் வேண்டும்
இனியென்ன போதும் -நாங்கள்
இனிதாக வாழ்வோம்
மயிலாடக் கண்டேன்
மணவாளன் வந்தான் -ஏனோ
மயங்கியே நின்றேன்
எதோ ஒன்று சொல்லிட -அங்கு
அருகில் சென்றேன்
இயலாமல் தோழி -அன்று
எதற்கோ மறந்தேன்
கைகளால் தொட்டு -என்னை
கனிவாக இழுத்தான்
பெண்மையின் நாணம் -அவனிடம்
பிறகென்ன சொல்லும்
கண்களால் அளந்தோம் -எங்கள்
காதலை வளர்த்தோம்
எண்ணாமல் இணைந்தோம் -பின்பு
எங்கேயோ பறந்தோம்
மறவேன் என்றான் -இன்னும்
வரவே இல்லை
கனமான நெஞ்சமும் -வீணாய்க்
கலங்குதே தோழி
ஒருநாள் வருவான் -இனிமேல்
ஒன்றாகி வாழ்வோம்
திருநாள் அதுதான் -நீயும்
திடம் கொள் தோழி
மன்னன் வேண்டும் -அவனால்
மக்களும் வேண்டும்
இனியென்ன போதும் -நாங்கள்
இனிதாக வாழ்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக