வெள்ளி, 18 ஜூலை, 2014

இனிதாக 282.

மானாடும்     சோலையில் -ஒரு
 மயிலாடக்     கண்டேன்
 மணவாளன்     வந்தான் -ஏனோ
 மயங்கியே     நின்றேன்

 எதோ ஒன்று     சொல்லிட -அங்கு
 அருகில்     சென்றேன்
 இயலாமல்     தோழி -அன்று
 எதற்கோ     மறந்தேன்

 கைகளால்     தொட்டு -என்னை
 கனிவாக     இழுத்தான்
 பெண்மையின்     நாணம் -அவனிடம்
 பிறகென்ன     சொல்லும்

 கண்களால்     அளந்தோம் -எங்கள்
 காதலை     வளர்த்தோம்
 எண்ணாமல்     இணைந்தோம் -பின்பு
 எங்கேயோ     பறந்தோம்

 மறவேன்     என்றான் -இன்னும்
 வரவே     இல்லை
 கனமான     நெஞ்சமும் -வீணாய்க்
 கலங்குதே     தோழி

 ஒருநாள்     வருவான் -இனிமேல்
 ஒன்றாகி     வாழ்வோம்
 திருநாள்     அதுதான் -நீயும்
 திடம் கொள்     தோழி

 மன்னன்     வேண்டும் -அவனால்
 மக்களும்     வேண்டும்
 இனியென்ன      போதும் -நாங்கள்
 இனிதாக     வாழ்வோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக