சனி, 12 ஜூலை, 2014

காவடி 268.

எனையாளும்   பெருமானே   ஈசா -உலகில்
 எளியோரைக்   காக்கின்ற    நேசா
 வினைதீர்க்க   வேலோடு  வருவாய் -அடியார்
 வேண்டுகின்ற   வரமெல்லாம்  தருவாய்

 தினைவள்ளி   மனம்கொண்ட   திருவே -கொடிய
 தீயோரை   அழிக்கும்    பெரு உருவே
 உனையன்றி  எனக்கேது  துணையே -இந்த
 உலகிலே   உனக்காரோ   இணையே

 தமிழென்றால்   நீதானே    ஐயா --உமது
 தாளடி   சுகம்  நல்கும்   மெய்யாய்
 அமிழ்தாகும்   அழகாகும்   முருகா -நல்
 அழகான    மயிலேறி   வருவாய்

 பழத்தினாலே  பழனியிலே   நின்றாய் -அன்று
 பகைவர்களைப்   போரினிலே   வென்றாய்
 குணமென்னும்   குன்றேறி சென்றாய் -என்
 குணவாளா   மணவாளா    குருநாதா

 இருமாதர்   புடைசூழ   வருக -உனது
 ஈராறு   கைகள்   எனைக்   காக்க  வருக
 திருமாலின்   மருகா   தேவாதி   தேவா -தேனான
 தமிழில்   தினம்  பாடி   மகிழ்வேன்

 காவடிகள்   ஆடுமுந்தன்   வாசல் -கந்தனே
 உந்தனுக்கு   தினமாறு   பூசை
 சேவடியைக்   காணவரும்   கூட்டம் -வேலன்
 கருணையினால்   மயில்கள்  போடும்   ஆட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக