எனையாளும் பெருமானே ஈசா -உலகில்
எளியோரைக் காக்கின்ற நேசா
வினைதீர்க்க வேலோடு வருவாய் -அடியார்
வேண்டுகின்ற வரமெல்லாம் தருவாய்
தினைவள்ளி மனம்கொண்ட திருவே -கொடிய
தீயோரை அழிக்கும் பெரு உருவே
உனையன்றி எனக்கேது துணையே -இந்த
உலகிலே உனக்காரோ இணையே
தமிழென்றால் நீதானே ஐயா --உமது
தாளடி சுகம் நல்கும் மெய்யாய்
அமிழ்தாகும் அழகாகும் முருகா -நல்
அழகான மயிலேறி வருவாய்
பழத்தினாலே பழனியிலே நின்றாய் -அன்று
பகைவர்களைப் போரினிலே வென்றாய்
குணமென்னும் குன்றேறி சென்றாய் -என்
குணவாளா மணவாளா குருநாதா
இருமாதர் புடைசூழ வருக -உனது
ஈராறு கைகள் எனைக் காக்க வருக
திருமாலின் மருகா தேவாதி தேவா -தேனான
தமிழில் தினம் பாடி மகிழ்வேன்
காவடிகள் ஆடுமுந்தன் வாசல் -கந்தனே
உந்தனுக்கு தினமாறு பூசை
சேவடியைக் காணவரும் கூட்டம் -வேலன்
கருணையினால் மயில்கள் போடும் ஆட்டம்
எளியோரைக் காக்கின்ற நேசா
வினைதீர்க்க வேலோடு வருவாய் -அடியார்
வேண்டுகின்ற வரமெல்லாம் தருவாய்
தினைவள்ளி மனம்கொண்ட திருவே -கொடிய
தீயோரை அழிக்கும் பெரு உருவே
உனையன்றி எனக்கேது துணையே -இந்த
உலகிலே உனக்காரோ இணையே
தமிழென்றால் நீதானே ஐயா --உமது
தாளடி சுகம் நல்கும் மெய்யாய்
அமிழ்தாகும் அழகாகும் முருகா -நல்
அழகான மயிலேறி வருவாய்
பழத்தினாலே பழனியிலே நின்றாய் -அன்று
பகைவர்களைப் போரினிலே வென்றாய்
குணமென்னும் குன்றேறி சென்றாய் -என்
குணவாளா மணவாளா குருநாதா
இருமாதர் புடைசூழ வருக -உனது
ஈராறு கைகள் எனைக் காக்க வருக
திருமாலின் மருகா தேவாதி தேவா -தேனான
தமிழில் தினம் பாடி மகிழ்வேன்
காவடிகள் ஆடுமுந்தன் வாசல் -கந்தனே
உந்தனுக்கு தினமாறு பூசை
சேவடியைக் காணவரும் கூட்டம் -வேலன்
கருணையினால் மயில்கள் போடும் ஆட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக