நீல வானம் நீயடி -உன்னை
நெருங்கும் நிலவு நானடி
வாலைக் குமரி நீயடி -எனக்கு
வாரித் தருவாய் தேனடி
காதல் வலையில் நானடி -அதை
காத்திட வேண்டும் நீயடி
மோதல் நமக்குள் ஏனடி -உன்மேல்
மோகம் என்பதும் சரியடி
இரவில் சுமைகள் ஏறுமே -அங்கு
இன்ப நினைவுகள் ஊறுமே
பழகவே மனதும் ஏங்கு மே -காதல்
படித்ததால் வந்திடும் தூக்கமே
வாழ்வில் நிறைவது வசந்தமே -இதில்
வருவது நமக்குச் சொந்தமே
நாளும் நடப்பது நன்மையே -உனை
நம்பி இருப்பதும் உண்மையே
கண்ணாய் உந்தனைக் காத்திருப்பேன் -என்றும்
கவலைகள் இன்றியே பார்த்திருப்பேன்
என்னால் தாங்கிட முடியாதோ -இந்த
ஏழையின் பொழுதும் விடியாதோ
சஞ்சலம் என்பதை விட்டுவிடு
சத்திய நெறிதனை கற்றுவிடு
நெஞ்சிலே கருணையை நிறையவிடு -என்னை
நிம்மதியாக உன்னுடன் வாழவிடு
நெருங்கும் நிலவு நானடி
வாலைக் குமரி நீயடி -எனக்கு
வாரித் தருவாய் தேனடி
காதல் வலையில் நானடி -அதை
காத்திட வேண்டும் நீயடி
மோதல் நமக்குள் ஏனடி -உன்மேல்
மோகம் என்பதும் சரியடி
இரவில் சுமைகள் ஏறுமே -அங்கு
இன்ப நினைவுகள் ஊறுமே
பழகவே மனதும் ஏங்கு மே -காதல்
படித்ததால் வந்திடும் தூக்கமே
வாழ்வில் நிறைவது வசந்தமே -இதில்
வருவது நமக்குச் சொந்தமே
நாளும் நடப்பது நன்மையே -உனை
நம்பி இருப்பதும் உண்மையே
கண்ணாய் உந்தனைக் காத்திருப்பேன் -என்றும்
கவலைகள் இன்றியே பார்த்திருப்பேன்
என்னால் தாங்கிட முடியாதோ -இந்த
ஏழையின் பொழுதும் விடியாதோ
சஞ்சலம் என்பதை விட்டுவிடு
சத்திய நெறிதனை கற்றுவிடு
நெஞ்சிலே கருணையை நிறையவிடு -என்னை
நிம்மதியாக உன்னுடன் வாழவிடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக