புதன், 23 ஜூலை, 2014

இன்ப நினைவு 298.

நீல   வானம்   நீயடி -உன்னை
 நெருங்கும்   நிலவு   நானடி
 வாலைக்   குமரி   நீயடி -எனக்கு
 வாரித்   தருவாய்   தேனடி

 காதல்   வலையில்   நானடி -அதை
 காத்திட   வேண்டும்   நீயடி
 மோதல்   நமக்குள்   ஏனடி -உன்மேல்
 மோகம்   என்பதும்   சரியடி

 இரவில்   சுமைகள்   ஏறுமே -அங்கு
 இன்ப   நினைவுகள்   ஊறுமே
 பழகவே   மனதும்    ஏங்கு மே -காதல்
 படித்ததால்   வந்திடும்   தூக்கமே

 வாழ்வில்   நிறைவது   வசந்தமே -இதில்
 வருவது   நமக்குச்   சொந்தமே
 நாளும்   நடப்பது   நன்மையே -உனை
 நம்பி   இருப்பதும்   உண்மையே

 கண்ணாய்   உந்தனைக்   காத்திருப்பேன் -என்றும்
 கவலைகள்  இன்றியே   பார்த்திருப்பேன்
 என்னால்   தாங்கிட   முடியாதோ -இந்த
 ஏழையின்   பொழுதும்   விடியாதோ

 சஞ்சலம்   என்பதை   விட்டுவிடு
 சத்திய   நெறிதனை   கற்றுவிடு
 நெஞ்சிலே    கருணையை   நிறையவிடு -என்னை
 நிம்மதியாக   உன்னுடன்   வாழவிடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக