சின்னஞ் சிறிய தளிர்களே -இங்கு
சிரிக்கும் மல்லிகை மலர்களே
நானும் நல்லவை சொல்லுவேன் -அதனை
நலமுடன் அன்பாய்க் கேட்பீரே
அன்பு என்பது அன்னையே -வரும்
அறிவு என்பதும் தந்தையே
இரண்டும் இணைந்தது குடும்பமே -இதனை
எண்ணியே நடந்திட வேண்டுமே
கூடியே வாழ்தல் நன்மையே -அது
குறைகள் இல்லாத தன்மையே
நாளும் இதையும் நம்பணும் -என்றும்
நம் நிலை எப்போதும் உயரணும்
கல்வியைக் கற்பது கடமையே -அதில்
கவனத்தை இழப்பது மடமையே
பள்ளியில் பாடம் படிக்கணும் -நாம்
படித்ததை செயலிலே காட்டணும்
தேசத்தை உயர்வாக போற்றணும் -பிறர்
செய்திட்ட தியாகத்தை நினைக்கணும்
தேகத்தை உறுதியாக வைக்கணும் -அந்த
தெய்வத்தை தினமும் துதிக்கணும்
மூத்தோர் தம்மையும் மதிக்கணும் -அவர்
முன்னேற வழி சொன்னால் கேட்கணும்
பார்த்ததை மனதிலே பதிக்கணும் -நம்
பாரதப் பண்பினைக் காக்கணும்
உழைப்பினை நம்பியே வாழணும் --நெஞ்சில்
உயர்வான எண்ணத்தைக் கொள்ளணும்
பிழைத்திட நல்வழி பார்க்கணும் -நாட்டின்
பெருமையை தோளிலே சுமக்கணும்
சிரிக்கும் மல்லிகை மலர்களே
நானும் நல்லவை சொல்லுவேன் -அதனை
நலமுடன் அன்பாய்க் கேட்பீரே
அன்பு என்பது அன்னையே -வரும்
அறிவு என்பதும் தந்தையே
இரண்டும் இணைந்தது குடும்பமே -இதனை
எண்ணியே நடந்திட வேண்டுமே
கூடியே வாழ்தல் நன்மையே -அது
குறைகள் இல்லாத தன்மையே
நாளும் இதையும் நம்பணும் -என்றும்
நம் நிலை எப்போதும் உயரணும்
கல்வியைக் கற்பது கடமையே -அதில்
கவனத்தை இழப்பது மடமையே
பள்ளியில் பாடம் படிக்கணும் -நாம்
படித்ததை செயலிலே காட்டணும்
தேசத்தை உயர்வாக போற்றணும் -பிறர்
செய்திட்ட தியாகத்தை நினைக்கணும்
தேகத்தை உறுதியாக வைக்கணும் -அந்த
தெய்வத்தை தினமும் துதிக்கணும்
மூத்தோர் தம்மையும் மதிக்கணும் -அவர்
முன்னேற வழி சொன்னால் கேட்கணும்
பார்த்ததை மனதிலே பதிக்கணும் -நம்
பாரதப் பண்பினைக் காக்கணும்
உழைப்பினை நம்பியே வாழணும் --நெஞ்சில்
உயர்வான எண்ணத்தைக் கொள்ளணும்
பிழைத்திட நல்வழி பார்க்கணும் -நாட்டின்
பெருமையை தோளிலே சுமக்கணும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக