வியாழன், 24 ஜூலை, 2014

பெருமை 302.

சின்னஞ்    சிறிய    தளிர்களே -இங்கு
 சிரிக்கும்    மல்லிகை    மலர்களே
 நானும்    நல்லவை    சொல்லுவேன் -அதனை
 நலமுடன்    அன்பாய்க்    கேட்பீரே

 அன்பு    என்பது    அன்னையே -வரும்
 அறிவு    என்பதும்    தந்தையே
 இரண்டும்    இணைந்தது    குடும்பமே -இதனை
 எண்ணியே    நடந்திட    வேண்டுமே

 கூடியே    வாழ்தல்    நன்மையே -அது
 குறைகள்    இல்லாத    தன்மையே
 நாளும்    இதையும்    நம்பணும் -என்றும்
 நம் நிலை    எப்போதும்    உயரணும்

 கல்வியைக்    கற்பது    கடமையே -அதில்
 கவனத்தை    இழப்பது    மடமையே
 பள்ளியில்    பாடம்    படிக்கணும் -நாம்
 படித்ததை    செயலிலே    காட்டணும்

 தேசத்தை    உயர்வாக     போற்றணும் -பிறர்
 செய்திட்ட    தியாகத்தை   நினைக்கணும்
 தேகத்தை    உறுதியாக    வைக்கணும் -அந்த
 தெய்வத்தை   தினமும்    துதிக்கணும்

 மூத்தோர்    தம்மையும்    மதிக்கணும் -அவர்
 முன்னேற   வழி சொன்னால்   கேட்கணும்
 பார்த்ததை    மனதிலே    பதிக்கணும் -நம்
 பாரதப்    பண்பினைக்    காக்கணும்

 உழைப்பினை    நம்பியே    வாழணும் --நெஞ்சில்
 உயர்வான     எண்ணத்தைக்    கொள்ளணும்
 பிழைத்திட    நல்வழி     பார்க்கணும் -நாட்டின்
 பெருமையை    தோளிலே    சுமக்கணும்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக