காதல் அரங்கேறுமா -என்
கனவு நிறைவேறுமா
மோதல் உருவாகுமா -வந்த
மோகம் தலைக்கேறுமா
ஒன்று இரண்டாகுமா -இந்த
உறவே துண்டாகுமா
என்று மணமாகுமோ -அந்த
இயற்கை சதி செய்யுமா
கண்கள் எனைப் பார்க்குமா -வரும்
காலம் சரியாகுமா
எண்ணம் இனிப்பாகுமா -உனது
இதயம் கனிவாகுமா
எனக்குத் துணை நீயடி -நாளும்
ஏங்கிக் கிடந்தேனடி
பிணக்கு வரலாமோடி -எனது
பித்தம் தெளியாதோடி
இறக்கம் வரவில்லையோ -ஏனோ
என்னை நினைவில்லையோ
உறக்கம் மறந்தேனடி -கொண்ட
உடமை துறந்தேனடி
இளமைத் துடிப்பில்லையா -உனக்கு
எண்ணம் தெளிவில்லையா
பழகிட மனமில்லையா -காதல்
பருவ உணர்வில்லையா
வாழ்ந்திட வழி காட்டடி -நீ
வற்றாதப் பொய்கையடி
ஆண்டிட வருவாயடி -நானுனது
அடிமை தெரியாதோடி
கனவு நிறைவேறுமா
மோதல் உருவாகுமா -வந்த
மோகம் தலைக்கேறுமா
ஒன்று இரண்டாகுமா -இந்த
உறவே துண்டாகுமா
என்று மணமாகுமோ -அந்த
இயற்கை சதி செய்யுமா
கண்கள் எனைப் பார்க்குமா -வரும்
காலம் சரியாகுமா
எண்ணம் இனிப்பாகுமா -உனது
இதயம் கனிவாகுமா
எனக்குத் துணை நீயடி -நாளும்
ஏங்கிக் கிடந்தேனடி
பிணக்கு வரலாமோடி -எனது
பித்தம் தெளியாதோடி
இறக்கம் வரவில்லையோ -ஏனோ
என்னை நினைவில்லையோ
உறக்கம் மறந்தேனடி -கொண்ட
உடமை துறந்தேனடி
இளமைத் துடிப்பில்லையா -உனக்கு
எண்ணம் தெளிவில்லையா
பழகிட மனமில்லையா -காதல்
பருவ உணர்வில்லையா
வாழ்ந்திட வழி காட்டடி -நீ
வற்றாதப் பொய்கையடி
ஆண்டிட வருவாயடி -நானுனது
அடிமை தெரியாதோடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக