வியாழன், 3 ஜூலை, 2014

துணிச்சல் 253.

வானில்    வருவது    ஒருநிளவு -நம்
 வாழ்விற்கு    தேவை   புதுநினைவு
 காணவே    சிரிப்பது    மலர்களே -அவை
 கற்றுக்    கொடுப்பது   மலர்ச்சியே

 எல்லாம்    கொடுத்தவர்    இறைவனே -அதனை
 எண்ணியே  ஒருமுறை   பார்த்தோமா
 கல்லார்    கயவர்     இருந்தாலும் -அவர்க்கும்
 கண்ணியம்   என்பது   வேண்டாமோ

 கொள்ளை   அடிப்பது    நியாயமில்லை -சிலர்
 குழிகளைப்   பறிப்பது ம்   தேவையில்லை
 வெள்ளை    மனமே    வெற்றியடா -அதுவே
 வெற்றியைக்  குவிப்பதும்   உண்மையடா

 போகையில்   உன்னுடன்    வருவதென்ன -செய்த
 புண்ணிய    பாபச்    செயல்கலன்றோ
 தீமை      என்பதை   விலக்கிவிடு -அந்த
 தெய்வத்தை  மனதிலே   வசிக்கவிடு

 இருக்கும்வரையில்   வாய்விட்டு   சிரித்துவிடு -நெஞ்சில்
 இருக்கும்   தீயஎண்ணம்   எடுத்துவிடு
 பொறுமை  என்பது   நமக்காகும் -அதுவே
 பூமிக்கு    எந்நாளும்    நலமாகும்

 நாளும்    உழைத்து    வாழ்ந்துவிடு -உன்னை
 நம்பிய    மனிதர்க்கும்   வாழ்வு கொடு
 காலம்     அறிந்து    கனிந்து விடு -என்றும்
 கடவுள்    காப்பார்   துணிந்துவிடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக