வானில் வருவது ஒருநிளவு -நம்
வாழ்விற்கு தேவை புதுநினைவு
காணவே சிரிப்பது மலர்களே -அவை
கற்றுக் கொடுப்பது மலர்ச்சியே
எல்லாம் கொடுத்தவர் இறைவனே -அதனை
எண்ணியே ஒருமுறை பார்த்தோமா
கல்லார் கயவர் இருந்தாலும் -அவர்க்கும்
கண்ணியம் என்பது வேண்டாமோ
கொள்ளை அடிப்பது நியாயமில்லை -சிலர்
குழிகளைப் பறிப்பது ம் தேவையில்லை
வெள்ளை மனமே வெற்றியடா -அதுவே
வெற்றியைக் குவிப்பதும் உண்மையடா
போகையில் உன்னுடன் வருவதென்ன -செய்த
புண்ணிய பாபச் செயல்கலன்றோ
தீமை என்பதை விலக்கிவிடு -அந்த
தெய்வத்தை மனதிலே வசிக்கவிடு
இருக்கும்வரையில் வாய்விட்டு சிரித்துவிடு -நெஞ்சில்
இருக்கும் தீயஎண்ணம் எடுத்துவிடு
பொறுமை என்பது நமக்காகும் -அதுவே
பூமிக்கு எந்நாளும் நலமாகும்
நாளும் உழைத்து வாழ்ந்துவிடு -உன்னை
நம்பிய மனிதர்க்கும் வாழ்வு கொடு
காலம் அறிந்து கனிந்து விடு -என்றும்
கடவுள் காப்பார் துணிந்துவிடு
வாழ்விற்கு தேவை புதுநினைவு
காணவே சிரிப்பது மலர்களே -அவை
கற்றுக் கொடுப்பது மலர்ச்சியே
எல்லாம் கொடுத்தவர் இறைவனே -அதனை
எண்ணியே ஒருமுறை பார்த்தோமா
கல்லார் கயவர் இருந்தாலும் -அவர்க்கும்
கண்ணியம் என்பது வேண்டாமோ
கொள்ளை அடிப்பது நியாயமில்லை -சிலர்
குழிகளைப் பறிப்பது ம் தேவையில்லை
வெள்ளை மனமே வெற்றியடா -அதுவே
வெற்றியைக் குவிப்பதும் உண்மையடா
போகையில் உன்னுடன் வருவதென்ன -செய்த
புண்ணிய பாபச் செயல்கலன்றோ
தீமை என்பதை விலக்கிவிடு -அந்த
தெய்வத்தை மனதிலே வசிக்கவிடு
இருக்கும்வரையில் வாய்விட்டு சிரித்துவிடு -நெஞ்சில்
இருக்கும் தீயஎண்ணம் எடுத்துவிடு
பொறுமை என்பது நமக்காகும் -அதுவே
பூமிக்கு எந்நாளும் நலமாகும்
நாளும் உழைத்து வாழ்ந்துவிடு -உன்னை
நம்பிய மனிதர்க்கும் வாழ்வு கொடு
காலம் அறிந்து கனிந்து விடு -என்றும்
கடவுள் காப்பார் துணிந்துவிடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக