திங்கள், 21 ஜூலை, 2014

ஸ்ரீ வள்ளி 289.

ஒருநாள்    திருநாள்   பெருநாள் -இங்கு
 உத்தமன்   முருகன்   வரு நாள்
 வள்ளிக்     கணவன்   வருவார் -அந்த
 வள்ளலைப்  பாடியே  மகிழ்வோம்

 சரவணப்   பொய்கையில்   பிறந்தார் -அவரை
 ஷண்முகன்   என்றே   அழைப்பார்
 ஆரிருகரம்   கொண்ட   ஐயன் -அவர்
 அழகெனும்   பேர்   பெற்ற   முருகன்

 தேவர்    குலம்    காக்க    பிறந்தார் -அன்று
 தெய்வ யானையை யும்   மணந்தார்
 பாவம்தனைப்   போக்கும்    புனிதர் -தெய்வ
 பார்வதி    தாயின்    மைந்தர்

 சொல்லி    அழைத்தாலே   வருவார் -நாம்
 சுகம்பெற   வரங்களை    தருவார்
 வள்ளிமலை   கொண்ட   வாசன் -மக்கள்
 வருத்தம்    தீர்க்கின்ற   நேசன்

 மலைகள்   எங்கிலும்    இருப்பார் -ஏழை
 மனிதர்கள்    மனதிலே   வசிப்பார்
 அலைவாழ்   செந்தூர்     வாசம் -என்றும்
 அடியவர்   மீதிலன்பு    பாசம்

 தமிழாய்    திகழ்வதும்    முருகன் -கொடிய
 தருக்கரை    அழித்தவர்    கந்தன்
 அமிழ்தாய்   இனிப்பதும்    அவரே -நாம்
 அனுதினம்   தொழுவதும்  நலனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக