ஒருநாள் திருநாள் பெருநாள் -இங்கு
உத்தமன் முருகன் வரு நாள்
வள்ளிக் கணவன் வருவார் -அந்த
வள்ளலைப் பாடியே மகிழ்வோம்
சரவணப் பொய்கையில் பிறந்தார் -அவரை
ஷண்முகன் என்றே அழைப்பார்
ஆரிருகரம் கொண்ட ஐயன் -அவர்
அழகெனும் பேர் பெற்ற முருகன்
தேவர் குலம் காக்க பிறந்தார் -அன்று
தெய்வ யானையை யும் மணந்தார்
பாவம்தனைப் போக்கும் புனிதர் -தெய்வ
பார்வதி தாயின் மைந்தர்
சொல்லி அழைத்தாலே வருவார் -நாம்
சுகம்பெற வரங்களை தருவார்
வள்ளிமலை கொண்ட வாசன் -மக்கள்
வருத்தம் தீர்க்கின்ற நேசன்
மலைகள் எங்கிலும் இருப்பார் -ஏழை
மனிதர்கள் மனதிலே வசிப்பார்
அலைவாழ் செந்தூர் வாசம் -என்றும்
அடியவர் மீதிலன்பு பாசம்
தமிழாய் திகழ்வதும் முருகன் -கொடிய
தருக்கரை அழித்தவர் கந்தன்
அமிழ்தாய் இனிப்பதும் அவரே -நாம்
அனுதினம் தொழுவதும் நலனே
உத்தமன் முருகன் வரு நாள்
வள்ளிக் கணவன் வருவார் -அந்த
வள்ளலைப் பாடியே மகிழ்வோம்
சரவணப் பொய்கையில் பிறந்தார் -அவரை
ஷண்முகன் என்றே அழைப்பார்
ஆரிருகரம் கொண்ட ஐயன் -அவர்
அழகெனும் பேர் பெற்ற முருகன்
தேவர் குலம் காக்க பிறந்தார் -அன்று
தெய்வ யானையை யும் மணந்தார்
பாவம்தனைப் போக்கும் புனிதர் -தெய்வ
பார்வதி தாயின் மைந்தர்
சொல்லி அழைத்தாலே வருவார் -நாம்
சுகம்பெற வரங்களை தருவார்
வள்ளிமலை கொண்ட வாசன் -மக்கள்
வருத்தம் தீர்க்கின்ற நேசன்
மலைகள் எங்கிலும் இருப்பார் -ஏழை
மனிதர்கள் மனதிலே வசிப்பார்
அலைவாழ் செந்தூர் வாசம் -என்றும்
அடியவர் மீதிலன்பு பாசம்
தமிழாய் திகழ்வதும் முருகன் -கொடிய
தருக்கரை அழித்தவர் கந்தன்
அமிழ்தாய் இனிப்பதும் அவரே -நாம்
அனுதினம் தொழுவதும் நலனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக