கந்தா முருகா கதிர்வேலா -என்றும்
கருணை புரியும் அருள் சீலா
சிந்தையில் வைத்துனை துதிக்கின்றேன் -இந்த
சிறுவனைக் காத்துநீ அருள்வாயே
மலையில் எறிநீயும் குடிபுகுந்தாய் -தமிழ்
மக்கள் மனதிலே வலம்வருவாய்
அலைசூழ் செந்தூர் கடலோரம் -எம்
அழகுத் தெய்வம் அமர்ந்தாயே
தேவர் படையின் தளபதிநீ -அன்று
திக்கெட்டும் வென்றிட்ட தேவனுமநீ
காவல் புரியும் காவலன் நீ -நம்
கன்னியர் வணங்கும் கற்பகம்நீ
தமிழர்க்கு என்றும் தலைவன் நீ -கொடிய
தருக்கரை அழித்திடும் தர்மமும் நீ
அமிழ்தினும் இனிய நல அழகனும் நீ -எங்கள்
அன்புக் கணபதி ஆசைத் தம்பியும் நீ
சங்கத்தமிழின் சரித்திரம் நீ -அன்று
சரவணப் பொய்கையில் உதித்தவன் நீ
வேடர் குலத்தின் வேந்தனும் நீ -வரும்
வினைகளைத் தீர்க்கும் விமலனும் நீ
தமிழெடுத்து உந்தன்புகழ் பாடுகிறேன் -உனது
தன்மையைப் போற்றியே ஆடுகிறேன்
வாழ்வினில் நலம்பல தந்திடுக -எனக்கு
வற்றாத செல்வங்கள் வழங்கிடுக
கருணை புரியும் அருள் சீலா
சிந்தையில் வைத்துனை துதிக்கின்றேன் -இந்த
சிறுவனைக் காத்துநீ அருள்வாயே
மலையில் எறிநீயும் குடிபுகுந்தாய் -தமிழ்
மக்கள் மனதிலே வலம்வருவாய்
அலைசூழ் செந்தூர் கடலோரம் -எம்
அழகுத் தெய்வம் அமர்ந்தாயே
தேவர் படையின் தளபதிநீ -அன்று
திக்கெட்டும் வென்றிட்ட தேவனுமநீ
காவல் புரியும் காவலன் நீ -நம்
கன்னியர் வணங்கும் கற்பகம்நீ
தமிழர்க்கு என்றும் தலைவன் நீ -கொடிய
தருக்கரை அழித்திடும் தர்மமும் நீ
அமிழ்தினும் இனிய நல அழகனும் நீ -எங்கள்
அன்புக் கணபதி ஆசைத் தம்பியும் நீ
சங்கத்தமிழின் சரித்திரம் நீ -அன்று
சரவணப் பொய்கையில் உதித்தவன் நீ
வேடர் குலத்தின் வேந்தனும் நீ -வரும்
வினைகளைத் தீர்க்கும் விமலனும் நீ
தமிழெடுத்து உந்தன்புகழ் பாடுகிறேன் -உனது
தன்மையைப் போற்றியே ஆடுகிறேன்
வாழ்வினில் நலம்பல தந்திடுக -எனக்கு
வற்றாத செல்வங்கள் வழங்கிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக