செவ்வாய், 8 ஜூலை, 2014

தளபதி 265.

கந்தா    முருகா    கதிர்வேலா -என்றும்
 கருணை  புரியும்    அருள் சீலா
 சிந்தையில்  வைத்துனை   துதிக்கின்றேன் -இந்த
 சிறுவனைக்    காத்துநீ   அருள்வாயே

 மலையில்    எறிநீயும்    குடிபுகுந்தாய் -தமிழ்
 மக்கள்    மனதிலே    வலம்வருவாய்
 அலைசூழ்     செந்தூர்    கடலோரம் -எம்
 அழகுத்     தெய்வம்    அமர்ந்தாயே

 தேவர்     படையின்    தளபதிநீ -அன்று
 திக்கெட்டும்   வென்றிட்ட    தேவனுமநீ
 காவல்    புரியும்    காவலன் நீ -நம்
 கன்னியர்    வணங்கும்    கற்பகம்நீ

 தமிழர்க்கு    என்றும்    தலைவன் நீ -கொடிய
 தருக்கரை    அழித்திடும்    தர்மமும்  நீ
 அமிழ்தினும்     இனிய  நல அழகனும் நீ -எங்கள்
 அன்புக் கணபதி      ஆசைத் தம்பியும்  நீ

 சங்கத்தமிழின்    சரித்திரம்    நீ -அன்று
 சரவணப்    பொய்கையில்     உதித்தவன் நீ
 வேடர்    குலத்தின்    வேந்தனும் நீ -வரும்
 வினைகளைத்    தீர்க்கும்    விமலனும் நீ



 தமிழெடுத்து    உந்தன்புகழ்    பாடுகிறேன் -உனது
 தன்மையைப்    போற்றியே    ஆடுகிறேன்
 வாழ்வினில்    நலம்பல    தந்திடுக -எனக்கு
 வற்றாத    செல்வங்கள்    வழங்கிடுக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக