இரவுப் பெண்ணாள் அழைக்கிறாள் -அவள்
எதனை எண்ணியோ சிரிக்கிறாள்
உறவெனும் தொடரை எழுதிட வா -இல்லை
உயிர்கள் அமைதி பெற்றிடவா
நீல வானில் தெரியுது நிலவுமுகம் -அதனை
நிதமும் ரசிக்கையில் என்னசுகம்
கோலக் குயில் தரும் குரலோசை இடையே
கொஞ்சிடும் வஞ்சியர் கைவளையோசை
தொட்டிலில் குழந்தையின் மழலைமொழி அங்கு
தொடர்ந்து சிரிப்பது செல்லக்கிளி
விட்டதைப் பிடிக்கும் வேங்கைவழி -காதல்
விரகத்தை தீர்த்திட என்னவழி
வேட்டைக்கு கிளம்பின விலங்குகளே -அதற்கு
விடியும் வரை கிடைப்பது வெற்றிகளே
பட்டையைக் கிளப்புது குறட்டை ஒலி -நாமும்
பார்த்து நடக்கணும் போகும்வழி
தேட்டையைப் போடுது திருட்டு முழி -பின்பு
திரும்பக் கிடைக்குமே உருட்டுக்கழி
பாட்டில் வருவது இன்ப ஒலி -நன்கு
படித்தவர் செல்வது அன்புவழி
ஏட்டில் தெரிவது இதயஒலி -நாளும்
ஏக்கப் பெருமூச்சு இளமை வழி
காட்டில் மிருகங்கள் தனிமைவழி எனது
காதல் வென்றிட என்னவழி
எதனை எண்ணியோ சிரிக்கிறாள்
உறவெனும் தொடரை எழுதிட வா -இல்லை
உயிர்கள் அமைதி பெற்றிடவா
நீல வானில் தெரியுது நிலவுமுகம் -அதனை
நிதமும் ரசிக்கையில் என்னசுகம்
கோலக் குயில் தரும் குரலோசை இடையே
கொஞ்சிடும் வஞ்சியர் கைவளையோசை
தொட்டிலில் குழந்தையின் மழலைமொழி அங்கு
தொடர்ந்து சிரிப்பது செல்லக்கிளி
விட்டதைப் பிடிக்கும் வேங்கைவழி -காதல்
விரகத்தை தீர்த்திட என்னவழி
வேட்டைக்கு கிளம்பின விலங்குகளே -அதற்கு
விடியும் வரை கிடைப்பது வெற்றிகளே
பட்டையைக் கிளப்புது குறட்டை ஒலி -நாமும்
பார்த்து நடக்கணும் போகும்வழி
தேட்டையைப் போடுது திருட்டு முழி -பின்பு
திரும்பக் கிடைக்குமே உருட்டுக்கழி
பாட்டில் வருவது இன்ப ஒலி -நன்கு
படித்தவர் செல்வது அன்புவழி
ஏட்டில் தெரிவது இதயஒலி -நாளும்
ஏக்கப் பெருமூச்சு இளமை வழி
காட்டில் மிருகங்கள் தனிமைவழி எனது
காதல் வென்றிட என்னவழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக