சனி, 5 ஜூலை, 2014

இரவில் 258.

இரவுப்    பெண்ணாள்    அழைக்கிறாள் -அவள்
 எதனை    எண்ணியோ   சிரிக்கிறாள்
 உறவெனும்  தொடரை  எழுதிட வா -இல்லை
 உயிர்கள்    அமைதி    பெற்றிடவா

 நீல வானில்  தெரியுது   நிலவுமுகம் -அதனை
 நிதமும்    ரசிக்கையில்   என்னசுகம்
 கோலக்    குயில் தரும்  குரலோசை இடையே
 கொஞ்சிடும்   வஞ்சியர்   கைவளையோசை

 தொட்டிலில்    குழந்தையின்   மழலைமொழி அங்கு
 தொடர்ந்து    சிரிப்பது    செல்லக்கிளி
 விட்டதைப்   பிடிக்கும்   வேங்கைவழி -காதல்
 விரகத்தை    தீர்த்திட    என்னவழி

 வேட்டைக்கு   கிளம்பின   விலங்குகளே -அதற்கு
 விடியும் வரை   கிடைப்பது   வெற்றிகளே
 பட்டையைக்    கிளப்புது   குறட்டை ஒலி -நாமும்
 பார்த்து    நடக்கணும்   போகும்வழி

 தேட்டையைப்    போடுது    திருட்டு முழி -பின்பு
 திரும்பக்    கிடைக்குமே    உருட்டுக்கழி
 பாட்டில்    வருவது    இன்ப ஒலி -நன்கு
 படித்தவர்    செல்வது    அன்புவழி

 ஏட்டில்    தெரிவது    இதயஒலி -நாளும்
 ஏக்கப்    பெருமூச்சு     இளமை வழி
 காட்டில்    மிருகங்கள்    தனிமைவழி எனது
 காதல்     வென்றிட    என்னவழி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக