சனி, 19 ஜூலை, 2014

வெற்றி 287.

அலையாடும்     கடலினிலே
 ஆழத்தினைக்     கண்டதுண்டோ
 உலகாளும்     உமையவளின்
 உள்ள நிலை     தெரிவதுண்டோ

 உளியாடும்     சிற்பத்தின்
 உண்மை நிலை     அறிவதுண்டோ
 நீர் போகும்     வழியினிலே
 நிலத்தின் வலி     குறைவதுண்டோ

 ஊர்கூட்டும்     சபைதனிலே
 உண்மையினை     உரைப்பதுண்டோ
 பேர் பெற்ற     மனிதரிடம்
 பெருந்தன்மை     என்பதுண்டோ

 ஏர் உழவன்     படும் சிரமம்
 எல்லாரும்     அறிவ துண்டோ
 பார் புகழும்     நாட்டினிலே
 பழிஎண்ணம்     மறைவதுண்டோ

 மனிதரோடு     மனிதர்க்கும்
 மனமலர்ச்சி     நிறைவதுண்டோ
 மாதாவின்     அருமைதனை
 மக்களும்     புரிந்ததுண்டோ

 நெஞ்சோடு     நெஞ்சாக
 நினை வலைகள்     கலப்பதுண்டோ
 அஞ்சாமல்     பழி செய்தோர்
 அமைதிதனை     அடைவதுண்டோ

 எழுதாமல்     மறந்தவைகள்
 இனிமேலும்     வருவதுண்டோ
 வெற்றி பெற     உழைக்காமல்
 வெறும் பேச்சு      வெல்வதுண்டொ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக