புதன், 23 ஜூலை, 2014

தோழி 297.

வாராய்    தோழி
 வாழ்க    நீடூழி
 கேளாய்    கதையை
 கிளர்ச்சியின்    நிலையை

 கண்ணால்    அழைத்தான்
 காதல்    தொடுத்தான்
 பெண்ணாய்    பிறந்தேன்
 பேதமை    அடைந்தேன்

 பள்ளியில்    பாடம்
 பத்தே    மாதம்
 அள்ளிக்    கொண்டது
 அழகிய    மகவு

 சொல்லிக்    கொடுத்தான்
 சுவைபடக்    கற்றேன்
 தள்ளிப்    போனான்
 தணலில்    வீழ்ந்தேன்

 வருவான்    என்றே
 வழிமேல்    நின்றேன்
 பெறுவேன்    வாழ்வு
 பிறகேன்    தாழ்வு

 சேதி    வந்தது
 சிந்தை    குளிர்ந்தது
 ஜோதி     தெரியுது
 சொர்க்கம்    அழைக்குது

 நலமாய்    தோழி
 நன்கு    வாழ்வேன்
 உளமாய்    சொன்னேன்
 உயர்நிலை    பெறுவேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக