நினைந்தவர் நெஞ்சினில் நீயிருப்பாய் -கண்ணா
நித்தமும் தொழுதோர் சுகம் பெறுவார்
வாழ்விலே வரம் தரும் வானமுதே -உன்னை
வணங்கிடும் அடியார் நலம் பெறுவார்
பிருந்தாவனத்தில் ஆடித் திரிந்த பெருமானே -உமது
பெருமையை சொல்லுதல் பெரும் பயனே
மறந்தவர் எவ்விதம் இதம் பெறுவார் -நிதம்
மதித்தவர் என்றுமே பலம் அடைவார்
சத்திய நெறி காத்திட வந்தவன் நீ -அன்று
சமரிலே கொடியவரைக் கொன்றவன் நீ
உத்தமி தேவகியின் புத்திரன் நீ -ஏழு
உலகத்தை ஆளும் உத்தமன் நீ
கம்சனை வதைத்து மக்களை காத்ததும் நீ -கொடிய
காளிங்கன் சிரசினில் ஆடியதும் நீ
நம்பியவருக்கு அருளும் நாரணன் நீ -பாரத
நாட்டினர் மனதில் நம்பிக்கை நீ
கோபியர் மனம் கொஞ்சும் கோபாலா --செய்த
குறும்புகள் சொல்லுதல் உலகினில் திருநாளே
பாவிகள் அழிந்திட மண்ணில் வந்தாய் -நல்
பார்த்தனுக்கு பாரதப் போரிலே சாரதி நீ
தினமுனைப் பணிவேன் திருமாலே -தூய
திருவடி நினைவேன் பெருமாளே
கனவிலும் மறவேன் வருநாளே -தெய்வ
கருணையைப் பாடுவேன் தமிழாலே
நித்தமும் தொழுதோர் சுகம் பெறுவார்
வாழ்விலே வரம் தரும் வானமுதே -உன்னை
வணங்கிடும் அடியார் நலம் பெறுவார்
பிருந்தாவனத்தில் ஆடித் திரிந்த பெருமானே -உமது
பெருமையை சொல்லுதல் பெரும் பயனே
மறந்தவர் எவ்விதம் இதம் பெறுவார் -நிதம்
மதித்தவர் என்றுமே பலம் அடைவார்
சத்திய நெறி காத்திட வந்தவன் நீ -அன்று
சமரிலே கொடியவரைக் கொன்றவன் நீ
உத்தமி தேவகியின் புத்திரன் நீ -ஏழு
உலகத்தை ஆளும் உத்தமன் நீ
கம்சனை வதைத்து மக்களை காத்ததும் நீ -கொடிய
காளிங்கன் சிரசினில் ஆடியதும் நீ
நம்பியவருக்கு அருளும் நாரணன் நீ -பாரத
நாட்டினர் மனதில் நம்பிக்கை நீ
கோபியர் மனம் கொஞ்சும் கோபாலா --செய்த
குறும்புகள் சொல்லுதல் உலகினில் திருநாளே
பாவிகள் அழிந்திட மண்ணில் வந்தாய் -நல்
பார்த்தனுக்கு பாரதப் போரிலே சாரதி நீ
தினமுனைப் பணிவேன் திருமாலே -தூய
திருவடி நினைவேன் பெருமாளே
கனவிலும் மறவேன் வருநாளே -தெய்வ
கருணையைப் பாடுவேன் தமிழாலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக