நெருப்பாய் இருந்தாய் -நான்
நீராய் அணைத்தேன்
வெறுப்பை துறந்தால் -இனி
விரும்பியே வருவேன்
வாழ்வில் வசந்தம் -உன்னிடம்
வந்திடும் கண்ணே
வாடியே இருந்தால் -இன்னும்
வருத்தங்கள் மிகுமே
ஆழியில் அலைகள் -சற்று
அடங்குதல் எப்போ
ஆழ்மனக் கடலில் -நல்ல
அமைதியே தப்போ
நல்லதை நினைப்பாய் -அதனால்
நன்மைகள் சேரும்
உண்மையாய் நடந்தால் -இந்த
உலகமே வணங்கும்
கள்ளம் வாழ்வினில் -பல
கவலைகள் சேர்க்கும்
உள்ளம் மலர்ந்தால் -என்றும்
உன்னதம் பெறலாம்
இருப்பதை வைத்து -நன்கு
சிறப்புடன் வாழு
இன்னுரை சொன்னால் -நீயும்
அன்புடன் கேளு
சினத்தினை தவிர்த்து -தூய
சிரிப்பினைச் சேர்த்து
உனக்கென உலகம் -இங்கே
உருவாக்க வேண்டும்
நீராய் அணைத்தேன்
வெறுப்பை துறந்தால் -இனி
விரும்பியே வருவேன்
வாழ்வில் வசந்தம் -உன்னிடம்
வந்திடும் கண்ணே
வாடியே இருந்தால் -இன்னும்
வருத்தங்கள் மிகுமே
ஆழியில் அலைகள் -சற்று
அடங்குதல் எப்போ
ஆழ்மனக் கடலில் -நல்ல
அமைதியே தப்போ
நல்லதை நினைப்பாய் -அதனால்
நன்மைகள் சேரும்
உண்மையாய் நடந்தால் -இந்த
உலகமே வணங்கும்
கள்ளம் வாழ்வினில் -பல
கவலைகள் சேர்க்கும்
உள்ளம் மலர்ந்தால் -என்றும்
உன்னதம் பெறலாம்
இருப்பதை வைத்து -நன்கு
சிறப்புடன் வாழு
இன்னுரை சொன்னால் -நீயும்
அன்புடன் கேளு
சினத்தினை தவிர்த்து -தூய
சிரிப்பினைச் சேர்த்து
உனக்கென உலகம் -இங்கே
உருவாக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக