சனி, 26 ஜூலை, 2014

புதிய உலகம் 305.

நெருப்பாய்    இருந்தாய் -நான்
 நீராய்      அணைத்தேன்
 வெறுப்பை   துறந்தால் -இனி
 விரும்பியே   வருவேன்

 வாழ்வில்    வசந்தம் -உன்னிடம்
 வந்திடும்   கண்ணே
 வாடியே    இருந்தால் -இன்னும்
 வருத்தங்கள்   மிகுமே

 ஆழியில்    அலைகள் -சற்று
 அடங்குதல்    எப்போ
 ஆழ்மனக்    கடலில் -நல்ல
 அமைதியே    தப்போ

 நல்லதை   நினைப்பாய் -அதனால்
 நன்மைகள்    சேரும்
 உண்மையாய்    நடந்தால் -இந்த
 உலகமே    வணங்கும்

 கள்ளம்    வாழ்வினில் -பல
 கவலைகள்   சேர்க்கும்
 உள்ளம்    மலர்ந்தால் -என்றும்
 உன்னதம்    பெறலாம்

 இருப்பதை    வைத்து -நன்கு
 சிறப்புடன்    வாழு
 இன்னுரை    சொன்னால் -நீயும்
 அன்புடன்    கேளு

 சினத்தினை    தவிர்த்து -தூய
 சிரிப்பினைச்   சேர்த்து
 உனக்கென   உலகம் -இங்கே
 உருவாக்க    வேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக