புதன், 23 ஜூலை, 2014

பண்பு 295.

போனதை    எண்ணியே  -தினம்
 புலம்புதல்    தவறு
 பொறுமையாய்    உழைத்துமே -நிறைய
 பொருளினைத்    தேடு

 நாளைய    உலகம் -இங்கு
 நமக்கென    இருக்கு
 நம்பிக்கை    வைத்திடில் -என்றும்
 நலமாய்    உயர்வாய்

 அறிவால்    உலகினை -நீயும்
 அறிந்திடப்    பாரு
 அதுதான்    திறமை -அதனால்
 அடையலாம்    பெருமை

 பெண்ணை    மதித்திடு -பிறர்
 பொருள்    மறுத்திடு
 கண்ணை    நம்பிடு -வீண்
 கவலையை    விரட்டிடு

 அன்பைப்    பழகிடு -ஏழைக்கு
 ஆறுதல்    சொல்லிடு
 பண்பை    வளர்த்திடு -வாழ்வில்
 பக்தியைப்    பெருக்கிடு

 தாயை     வணங்கிடு -பொல்லா
 தலைக்கனம்    விட்டிடு
 வாய்மை    பேசிடு  -நன்கு
 வாழ்ந்து    பார்த்திடு
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக