செவ்வாய், 29 ஜூலை, 2014

உன்னை நினைக்கையிலே 309.

நலமாய்    நானும்
 நாளும்    இருந்தேன்
 தேனே    வந்தாய்
 திகைத்து    நின்றேன்

 வானார்    மதியும்
 வருத்தம்    அடையும்
 கானக்     குயிலும்
 கவலை    கொள்ளும்

 அடங்கா    அலையும்
 அடங்கிப்    போகும்
 இடியும்    மழையும்
 எங்கோ    ஓடும்

 இரவா    பகலா
 இரண்டும்    மயங்கும்
 உறவா    பிரிவா
 உள்ளம்    அறியும்

 காற்றும்    மெல்ல
 கனிவாய்    வீசும்
 ஆற்று    நீரும்
 அமைதி    காக்கும்

 சேற்றில்    நண்டுகள்
 செயலை    நிறுத்தும்
 சிட்டுக்    குருவிகள்
 கொட்டம்    குறையும்

 வானம்    பாடி
 கானம்    மறக்கும்
 வீணையின்    நாதம்
 விரகம்    மீட்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக