நல்லவர்கள் தோற்பதில்லை
நஞ்சுமனம் வெல்வதில்லை
நாணயமும் நம்பிக்கையும்
நாட்டினர்க்கு கண்களடா
கடவுள் வந்தார் இங்கே கடவுள் வந்தார் -நம்
கவலைகளைக் தீர்த்திடவே கடவுள் வந்தார்
வாடிநின்ற பேர்களுக்கும் வாழ்வு தந்தார் -தனது
வற்றாத கருணைகளை வாரித் தந்தார்
கோடி செல்வம் அத்தனையும் கடவுள் தந்தார் -தெரு
கோவிலிலே தெய்வமாக அவரே வந்தார்
மனிதர்க்கு நன்மை செய்ய கடவுள் வந்தார் -இந்த
மண்ணிலே பொன்னைத் தர கடவுள் வந்தார்
கனிந்த மரம் போலத்தானே கடவுள் வந்தார் -நல்ல
காருண்ய மூர்த்தியாக கடவுள் வந்தார்
பெண் குலத்தைப் போற்றிடவே கடவுள் வந்தார் -அவர்கள்
பேதமையை நீக்கிடவே கடவுள் வந்தார்
உண்மைகளைப் புரியவைக்க கடவுள் வந்தார் -தூய
உள்ளத்திலே குடியிருக்க கடவுள் வந்தார்
காலம உள்ள வரையிலும் கடவுள் வருவார் -இளம்
கன்னியரைக் காத்து நிற்க கடவுள் வருவார்
சீலமதைக் கற்றுத்தர கடவுள் வருவார் -மக்கள்
சிந்தையிலே கொலுவிருக்க கடவுள் வருவார்
வாழுகின்ற ஜீவன்களில் கடவுள் உண்டு -என்றும்
வற்றாத நீர்நிலையில் கடவுள் உண்டு
தேடுகின்ற காலங்களில் கடவுள் உண்டு -நமது
தேமதுரத் தமிழினிலும் கடவுள் உண்டு
நஞ்சுமனம் வெல்வதில்லை
நாணயமும் நம்பிக்கையும்
நாட்டினர்க்கு கண்களடா
கடவுள் வந்தார் இங்கே கடவுள் வந்தார் -நம்
கவலைகளைக் தீர்த்திடவே கடவுள் வந்தார்
வாடிநின்ற பேர்களுக்கும் வாழ்வு தந்தார் -தனது
வற்றாத கருணைகளை வாரித் தந்தார்
கோடி செல்வம் அத்தனையும் கடவுள் தந்தார் -தெரு
கோவிலிலே தெய்வமாக அவரே வந்தார்
மனிதர்க்கு நன்மை செய்ய கடவுள் வந்தார் -இந்த
மண்ணிலே பொன்னைத் தர கடவுள் வந்தார்
கனிந்த மரம் போலத்தானே கடவுள் வந்தார் -நல்ல
காருண்ய மூர்த்தியாக கடவுள் வந்தார்
பெண் குலத்தைப் போற்றிடவே கடவுள் வந்தார் -அவர்கள்
பேதமையை நீக்கிடவே கடவுள் வந்தார்
உண்மைகளைப் புரியவைக்க கடவுள் வந்தார் -தூய
உள்ளத்திலே குடியிருக்க கடவுள் வந்தார்
காலம உள்ள வரையிலும் கடவுள் வருவார் -இளம்
கன்னியரைக் காத்து நிற்க கடவுள் வருவார்
சீலமதைக் கற்றுத்தர கடவுள் வருவார் -மக்கள்
சிந்தையிலே கொலுவிருக்க கடவுள் வருவார்
வாழுகின்ற ஜீவன்களில் கடவுள் உண்டு -என்றும்
வற்றாத நீர்நிலையில் கடவுள் உண்டு
தேடுகின்ற காலங்களில் கடவுள் உண்டு -நமது
தேமதுரத் தமிழினிலும் கடவுள் உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக