ஞாயிறு, 6 ஜூலை, 2014

கடவுள் 260.

நல்லவர்கள்    தோற்பதில்லை
 நஞ்சுமனம்     வெல்வதில்லை
 நாணயமும்   நம்பிக்கையும்
 நாட்டினர்க்கு  கண்களடா

 கடவுள்  வந்தார்  இங்கே  கடவுள்  வந்தார் -நம்
 கவலைகளைக்  தீர்த்திடவே  கடவுள் வந்தார்

 வாடிநின்ற  பேர்களுக்கும்  வாழ்வு  தந்தார் -தனது
 வற்றாத    கருணைகளை  வாரித் தந்தார்
 கோடி செல்வம்   அத்தனையும்  கடவுள்  தந்தார் -தெரு
 கோவிலிலே  தெய்வமாக  அவரே   வந்தார்

 மனிதர்க்கு  நன்மை செய்ய  கடவுள்  வந்தார் -இந்த
 மண்ணிலே  பொன்னைத்  தர கடவுள்  வந்தார்
 கனிந்த மரம்  போலத்தானே  கடவுள்  வந்தார் -நல்ல
 காருண்ய   மூர்த்தியாக  கடவுள்  வந்தார்

 பெண் குலத்தைப்  போற்றிடவே  கடவுள்  வந்தார் -அவர்கள்
 பேதமையை  நீக்கிடவே  கடவுள்  வந்தார்
 உண்மைகளைப்  புரியவைக்க  கடவுள் வந்தார் -தூய
 உள்ளத்திலே   குடியிருக்க  கடவுள் வந்தார்

 காலம உள்ள  வரையிலும்  கடவுள் வருவார் -இளம்
 கன்னியரைக்  காத்து நிற்க  கடவுள்  வருவார்
 சீலமதைக்  கற்றுத்தர கடவுள் வருவார் -மக்கள்
 சிந்தையிலே  கொலுவிருக்க  கடவுள்  வருவார்

 வாழுகின்ற   ஜீவன்களில்  கடவுள்  உண்டு -என்றும்
 வற்றாத   நீர்நிலையில்   கடவுள்   உண்டு
 தேடுகின்ற   காலங்களில்  கடவுள்  உண்டு -நமது
 தேமதுரத்   தமிழினிலும்   கடவுள்  உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக