வெள்ளி, 11 ஜூலை, 2014

மஞ்சள் 266.

இளையநிலா    அழைக்கிறது -அது
 எதனை  நினைத்து    சிரிக்கிறது
 உலவும்  தென்றல்    விளிக்கிறதா -இல்லை
 உள்ளம் கொள்ளை    போகிறதா

 அலைகள்    ஆடும்    ஆட்டமென்ன -நீரை
  அள்ளி தெளிக்கும்     கோலமென்ன
 வலையில்   வீழா    மீன்கள் -தினம்
 வந்து    மீண்டும்    போவதென்ன

 வளையில்    வசிக்கும்    நண்டுகளும் -மணலில்
 வாணம்    பறித்து    செல்வதென்ன
 தழுவி    செல்லும்    மேகங்களும் -இங்கு
 தாலாட்டும்    கோலம்   என்னவோ

 கண்ணைக்    கவரும்    பறவைகள் -உயரே
 காற்றில்    வட்டம்    இடுவதென்ன
 எண்ண    எண்ண   இன்பமடா -இது
 இறைவன்    செய்யும்   வேலையடா

  கட்டு மரப்    படகில்    சென்று -தம்
  கஷ்ட நிலையைக்  கருத்தில்    கொண்டு
 ஆட்டம்  போடும்   அலைகள் மேலே -துணிந்து
 அலைந்து   பயணம்  செய்யும்  தோழர்களே

 தாகம்    தீர்க்க   தண்ணீர்   இல்லை -நீங்கள்
 தவறி   வீழ்ந்தால்   உயிரே   இல்லை
 வானம்   உமக்கு   கூரையாகும் -வரும்
 மின்னல்   மழை   நண்பராகும்

 வெண்ணிலவை   சாட்சி    வைத்து -பிறர்க்கு
 வேண்டும்   மீனை    அள்ளிடுவீர்
 கண்ணீர்   மழையில்   நனையும் -உங்கள்
 கண்ணகியர்   மஞ்சள்   வாழ்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக