இளையநிலா அழைக்கிறது -அது
எதனை நினைத்து சிரிக்கிறது
உலவும் தென்றல் விளிக்கிறதா -இல்லை
உள்ளம் கொள்ளை போகிறதா
அலைகள் ஆடும் ஆட்டமென்ன -நீரை
அள்ளி தெளிக்கும் கோலமென்ன
வலையில் வீழா மீன்கள் -தினம்
வந்து மீண்டும் போவதென்ன
வளையில் வசிக்கும் நண்டுகளும் -மணலில்
வாணம் பறித்து செல்வதென்ன
தழுவி செல்லும் மேகங்களும் -இங்கு
தாலாட்டும் கோலம் என்னவோ
கண்ணைக் கவரும் பறவைகள் -உயரே
காற்றில் வட்டம் இடுவதென்ன
எண்ண எண்ண இன்பமடா -இது
இறைவன் செய்யும் வேலையடா
கட்டு மரப் படகில் சென்று -தம்
கஷ்ட நிலையைக் கருத்தில் கொண்டு
ஆட்டம் போடும் அலைகள் மேலே -துணிந்து
அலைந்து பயணம் செய்யும் தோழர்களே
தாகம் தீர்க்க தண்ணீர் இல்லை -நீங்கள்
தவறி வீழ்ந்தால் உயிரே இல்லை
வானம் உமக்கு கூரையாகும் -வரும்
மின்னல் மழை நண்பராகும்
வெண்ணிலவை சாட்சி வைத்து -பிறர்க்கு
வேண்டும் மீனை அள்ளிடுவீர்
கண்ணீர் மழையில் நனையும் -உங்கள்
கண்ணகியர் மஞ்சள் வாழ்க
எதனை நினைத்து சிரிக்கிறது
உலவும் தென்றல் விளிக்கிறதா -இல்லை
உள்ளம் கொள்ளை போகிறதா
அலைகள் ஆடும் ஆட்டமென்ன -நீரை
அள்ளி தெளிக்கும் கோலமென்ன
வலையில் வீழா மீன்கள் -தினம்
வந்து மீண்டும் போவதென்ன
வளையில் வசிக்கும் நண்டுகளும் -மணலில்
வாணம் பறித்து செல்வதென்ன
தழுவி செல்லும் மேகங்களும் -இங்கு
தாலாட்டும் கோலம் என்னவோ
கண்ணைக் கவரும் பறவைகள் -உயரே
காற்றில் வட்டம் இடுவதென்ன
எண்ண எண்ண இன்பமடா -இது
இறைவன் செய்யும் வேலையடா
கட்டு மரப் படகில் சென்று -தம்
கஷ்ட நிலையைக் கருத்தில் கொண்டு
ஆட்டம் போடும் அலைகள் மேலே -துணிந்து
அலைந்து பயணம் செய்யும் தோழர்களே
தாகம் தீர்க்க தண்ணீர் இல்லை -நீங்கள்
தவறி வீழ்ந்தால் உயிரே இல்லை
வானம் உமக்கு கூரையாகும் -வரும்
மின்னல் மழை நண்பராகும்
வெண்ணிலவை சாட்சி வைத்து -பிறர்க்கு
வேண்டும் மீனை அள்ளிடுவீர்
கண்ணீர் மழையில் நனையும் -உங்கள்
கண்ணகியர் மஞ்சள் வாழ்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக