மலர்கள் அழைத்தன மகிழ்வாலே -நானும்
மயங்கியே சென்றேன் நறு மணத்தாலே
இதயம் கனிந்தது எதனாலே -அதை
எப்படிச் சொல்வேன் மொழியாலே
கண்ணன் பிறந்தான் சிறையினிலே -அவன்
கம்சனைக் கொன்றான் ஒருநாளில்
உலகினைக் காத்திட வதம் செய்தான் -அந்த
உத்தமன் சொல்வழி நடப்போமே
ஏழையின் நெஞ்சத்தில் இருக்கின்றான் -நமக்கு
இன்பத்தை அள்ளியே தருகின்றான்
ராதையின் மனதில் வசிக்கின்றான் -உலகில்
நால்வகை வேதமாய் தெரிகின்றான்
நினைந்து நினைந்து தொழுதாலே -என்றும்
நித்தமும் வருவான் நம் இல்லத்திலே
கன்னியர் மானத்தின் காப்பாளன் -அந்த
கண்ணனின் மறு பெயர் கோபாலன்
திருநாள் வருவது அவனாலே -என்
தேகம் துடிப்பது உணர்வாலே
வரும்நாள் வாசல் வழிபார்ப்பேன் -அவன்
வந்ததும் என்னுடன் இணை சேர்ப்பேன்
வெள்ளம் வழியும் என் வீட்டினிலே -ஏனோ
விடியும் பொழுதும் கூட்டினிலே
உள்ளம் சிலிர்க்குமே பாட்டினிலே -கண்ணன்
உறவினைச் சொன்னேன் ஏட்டினிலே
மயங்கியே சென்றேன் நறு மணத்தாலே
இதயம் கனிந்தது எதனாலே -அதை
எப்படிச் சொல்வேன் மொழியாலே
கண்ணன் பிறந்தான் சிறையினிலே -அவன்
கம்சனைக் கொன்றான் ஒருநாளில்
உலகினைக் காத்திட வதம் செய்தான் -அந்த
உத்தமன் சொல்வழி நடப்போமே
ஏழையின் நெஞ்சத்தில் இருக்கின்றான் -நமக்கு
இன்பத்தை அள்ளியே தருகின்றான்
ராதையின் மனதில் வசிக்கின்றான் -உலகில்
நால்வகை வேதமாய் தெரிகின்றான்
நினைந்து நினைந்து தொழுதாலே -என்றும்
நித்தமும் வருவான் நம் இல்லத்திலே
கன்னியர் மானத்தின் காப்பாளன் -அந்த
கண்ணனின் மறு பெயர் கோபாலன்
திருநாள் வருவது அவனாலே -என்
தேகம் துடிப்பது உணர்வாலே
வரும்நாள் வாசல் வழிபார்ப்பேன் -அவன்
வந்ததும் என்னுடன் இணை சேர்ப்பேன்
வெள்ளம் வழியும் என் வீட்டினிலே -ஏனோ
விடியும் பொழுதும் கூட்டினிலே
உள்ளம் சிலிர்க்குமே பாட்டினிலே -கண்ணன்
உறவினைச் சொன்னேன் ஏட்டினிலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக