புதன், 30 ஜூலை, 2014

கண்ணன் காட்டிய வழி 310*

ஆலம்   உண்ட   சிவனே -அந்த
 ஆழியில்   துயிலும்   ஹரியே
  உலகம்   காப்பவர்   நீங்கள் -உமக்கு
 நன்றி    சொல்வோம்   நாங்கள்

 தீமை   எங்கெலாம்   வருமோ -அதனை
 திரும்பவும்   அழித்திட   வருவீர்
 பாவிகள்   தம்மையும்   திருத்தி -நல்
 பக்தி   மார்க்கமும்   தருவீர்

 உலகம்   உயர்ந்திட   வழிகள் -பிறர்க்கு
 உணர்த்திட   கீதையைத்   தந்தீர்
 களைகளை   களைந்து   மாந்தர் -உமது
 கருணையை   நினைந்திட   வேண்டும்

 அன்பினைப்   பிறர்க்கு   அளித்து -நாம்
 அனைவரும்   நலம்பெற   வேண்டும்
 பண்புகள்  கொண்டவர்   வாழ்வில் -நற்
 பலன்களும்   நிறைவதைக்   காணலாம்

 உயிர்களை   சமமாய்    மதித்து -என்றும்
 உண்மையாய்   நடந்திடல்   வேண்டும்
 குறைகளைத்   தவிர்த்து   வாழ்வினில் -பெரும்
 குன்றென   உயர்ந்திட   வேண்டும்

 நல்லவை   எல்லாம்   நடக்கும் -நல்ல
 நம்பிக்கை   இன்பத்தை   அளிக்கும்
 கள்ளத்தை   மனதிலே   களைந்து -கண்ணன்
 காட்டிய   வழிதனில்   நடப்பீர் 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக