ஆலம் உண்ட சிவனே -அந்த
ஆழியில் துயிலும் ஹரியே
உலகம் காப்பவர் நீங்கள் -உமக்கு
நன்றி சொல்வோம் நாங்கள்
தீமை எங்கெலாம் வருமோ -அதனை
திரும்பவும் அழித்திட வருவீர்
பாவிகள் தம்மையும் திருத்தி -நல்
பக்தி மார்க்கமும் தருவீர்
உலகம் உயர்ந்திட வழிகள் -பிறர்க்கு
உணர்த்திட கீதையைத் தந்தீர்
களைகளை களைந்து மாந்தர் -உமது
கருணையை நினைந்திட வேண்டும்
அன்பினைப் பிறர்க்கு அளித்து -நாம்
அனைவரும் நலம்பெற வேண்டும்
பண்புகள் கொண்டவர் வாழ்வில் -நற்
பலன்களும் நிறைவதைக் காணலாம்
உயிர்களை சமமாய் மதித்து -என்றும்
உண்மையாய் நடந்திடல் வேண்டும்
குறைகளைத் தவிர்த்து வாழ்வினில் -பெரும்
குன்றென உயர்ந்திட வேண்டும்
நல்லவை எல்லாம் நடக்கும் -நல்ல
நம்பிக்கை இன்பத்தை அளிக்கும்
கள்ளத்தை மனதிலே களைந்து -கண்ணன்
காட்டிய வழிதனில் நடப்பீர்
ஆழியில் துயிலும் ஹரியே
உலகம் காப்பவர் நீங்கள் -உமக்கு
நன்றி சொல்வோம் நாங்கள்
தீமை எங்கெலாம் வருமோ -அதனை
திரும்பவும் அழித்திட வருவீர்
பாவிகள் தம்மையும் திருத்தி -நல்
பக்தி மார்க்கமும் தருவீர்
உலகம் உயர்ந்திட வழிகள் -பிறர்க்கு
உணர்த்திட கீதையைத் தந்தீர்
களைகளை களைந்து மாந்தர் -உமது
கருணையை நினைந்திட வேண்டும்
அன்பினைப் பிறர்க்கு அளித்து -நாம்
அனைவரும் நலம்பெற வேண்டும்
பண்புகள் கொண்டவர் வாழ்வில் -நற்
பலன்களும் நிறைவதைக் காணலாம்
உயிர்களை சமமாய் மதித்து -என்றும்
உண்மையாய் நடந்திடல் வேண்டும்
குறைகளைத் தவிர்த்து வாழ்வினில் -பெரும்
குன்றென உயர்ந்திட வேண்டும்
நல்லவை எல்லாம் நடக்கும் -நல்ல
நம்பிக்கை இன்பத்தை அளிக்கும்
கள்ளத்தை மனதிலே களைந்து -கண்ணன்
காட்டிய வழிதனில் நடப்பீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக