அன்னை என்றாள் -அதில்
அன்பு என்றேன்
தென்னை என்றாள் -வரும்
தாகம் என்றேன்
கண்கள் என்றாள் -உடனே
காதல் என்றேன்
கன்னம் என்றாள் -கடித்து
தின்பேன் என்றேன்
வா வா என்றேன் -நான்
வருவேனோ என்றாள்
தா தா என்றேன் -ஏனோ
தள்ளிப் போனாள்
இன்னும் என்றேன் -அது
எதற்கு என்றாள்
முன்னால் சென்றாள் -நானும்
முதுகைத் தொட்டேன்
கெட்டேன் என்றாள் -மன
கிளர்ச்சி என்றேன்
தொட்டேன் என்றேன் -இனி
தொல்லை என்றாள்
பண்பு என்றாள் -நான்
பாசம் என்றேன்
வம்பு என்றாள் -நெருங்கி
வாடி என்றேன்
நெஞ்சில் நினைப்பேன் -அவளை
நித்தம் அணைப்பேன்
கொஞ்சும் பொழுதில் -எனக்கு
கூடும் இளமை
நாணம் என்றாள் -அது
நமக்கேன் என்றேன்
வேண்டும் என்றேன் -சற்று
விலகிச் சென்றாள்
அமுதே என்றேன் -அன்று
அருகில் வந்தாள்
தெம்பும் தந்தாள் -வாழ்வில்
தேனாய் இனிப்பாள்
அன்பு என்றேன்
தென்னை என்றாள் -வரும்
தாகம் என்றேன்
கண்கள் என்றாள் -உடனே
காதல் என்றேன்
கன்னம் என்றாள் -கடித்து
தின்பேன் என்றேன்
வா வா என்றேன் -நான்
வருவேனோ என்றாள்
தா தா என்றேன் -ஏனோ
தள்ளிப் போனாள்
இன்னும் என்றேன் -அது
எதற்கு என்றாள்
முன்னால் சென்றாள் -நானும்
முதுகைத் தொட்டேன்
கெட்டேன் என்றாள் -மன
கிளர்ச்சி என்றேன்
தொட்டேன் என்றேன் -இனி
தொல்லை என்றாள்
பண்பு என்றாள் -நான்
பாசம் என்றேன்
வம்பு என்றாள் -நெருங்கி
வாடி என்றேன்
நெஞ்சில் நினைப்பேன் -அவளை
நித்தம் அணைப்பேன்
கொஞ்சும் பொழுதில் -எனக்கு
கூடும் இளமை
நாணம் என்றாள் -அது
நமக்கேன் என்றேன்
வேண்டும் என்றேன் -சற்று
விலகிச் சென்றாள்
அமுதே என்றேன் -அன்று
அருகில் வந்தாள்
தெம்பும் தந்தாள் -வாழ்வில்
தேனாய் இனிப்பாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக