திங்கள், 7 ஜூலை, 2014

கிளர்ச்சி 261.

அன்னை    என்றாள் -அதில்
 அன்பு    என்றேன்
 தென்னை    என்றாள் -வரும்
 தாகம்    என்றேன்

 கண்கள்    என்றாள்  -உடனே
 காதல்     என்றேன்
 கன்னம்    என்றாள் -கடித்து
 தின்பேன்    என்றேன்

 வா வா    என்றேன் -நான்
 வருவேனோ    என்றாள்
 தா  தா      என்றேன் -ஏனோ
 தள்ளிப்    போனாள்

 இன்னும்    என்றேன் -அது
 எதற்கு    என்றாள்
 முன்னால்    சென்றாள் -நானும்
 முதுகைத்    தொட்டேன்

 கெட்டேன்    என்றாள் -மன
 கிளர்ச்சி     என்றேன்
 தொட்டேன்    என்றேன் -இனி
 தொல்லை    என்றாள்

 பண்பு    என்றாள் -நான்
 பாசம்    என்றேன்
 வம்பு    என்றாள் -நெருங்கி
 வாடி    என்றேன்

 நெஞ்சில்    நினைப்பேன் -அவளை
 நித்தம்    அணைப்பேன்
 கொஞ்சும்    பொழுதில் -எனக்கு
 கூடும்     இளமை

 நாணம்    என்றாள் -அது
 நமக்கேன்    என்றேன்
 வேண்டும்    என்றேன் -சற்று
 விலகிச்    சென்றாள்

 அமுதே    என்றேன் -அன்று
 அருகில்    வந்தாள்
 தெம்பும்    தந்தாள் -வாழ்வில்
 தேனாய்    இனிப்பாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக