நாடகம் எங்கிலும் நடக்குது -அதில்
நன்மையையும் தீமையும் அடங்குது
ஏடுகள் எதையோ எழுதுது -அதற்கு
ஏற்படும் நிலைமைகள் புரியுது
பெண்ணிற்கு கொடுமைகள் செய்யுது -அதனை
பெரிய போர்வைகள் மறைக்குது
கண்ணையும் காதையு ம் கெடுக்குது -அதுவே
கலாசார மென்றே புளுகுது
விண்ணிலும் வேடிக்கை காட்டுது -மனிதனை
வேடிக்கை பொருளாக்கி கொல்லுது
உண்மையை மறைத்தே உளறுது -ஏன்
உலகத்தை தூசென மதிக்குது
ஏழையின் வயிற்றிலே அடிக்குது --அதை
எதிர்த்துக் கேட்டாலே முறைக்குது
வேலைக்கு கூலியைக் குறைக்குது -அவர்
வேதனைப் படுவதை ரசிக்குது
அணைகளைப் புதிதாய்க் கட்டுது -ஏனோ
அரசியல் புகுந்துமே கெடுக்குது
துணையைப் பகையென நினைக்குது -நல்ல
தோழமை உணர்வினை வெறுக்குது
மாறிடும் என்று நாம் நினைக்கிறோம் -தமிழ்
மண் வளம் பெருகிட உழைக்கிறோம்
யாரிடம் குறைகளைச் சொல்வது -இனி
எப்படி துயர்களை வெல்வது
நன்மையையும் தீமையும் அடங்குது
ஏடுகள் எதையோ எழுதுது -அதற்கு
ஏற்படும் நிலைமைகள் புரியுது
பெண்ணிற்கு கொடுமைகள் செய்யுது -அதனை
பெரிய போர்வைகள் மறைக்குது
கண்ணையும் காதையு ம் கெடுக்குது -அதுவே
கலாசார மென்றே புளுகுது
விண்ணிலும் வேடிக்கை காட்டுது -மனிதனை
வேடிக்கை பொருளாக்கி கொல்லுது
உண்மையை மறைத்தே உளறுது -ஏன்
உலகத்தை தூசென மதிக்குது
ஏழையின் வயிற்றிலே அடிக்குது --அதை
எதிர்த்துக் கேட்டாலே முறைக்குது
வேலைக்கு கூலியைக் குறைக்குது -அவர்
வேதனைப் படுவதை ரசிக்குது
அணைகளைப் புதிதாய்க் கட்டுது -ஏனோ
அரசியல் புகுந்துமே கெடுக்குது
துணையைப் பகையென நினைக்குது -நல்ல
தோழமை உணர்வினை வெறுக்குது
மாறிடும் என்று நாம் நினைக்கிறோம் -தமிழ்
மண் வளம் பெருகிட உழைக்கிறோம்
யாரிடம் குறைகளைச் சொல்வது -இனி
எப்படி துயர்களை வெல்வது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக