செவ்வாய், 22 ஜூலை, 2014

நாடகம் 294.

நாடகம்    எங்கிலும்    நடக்குது -அதில்
 நன்மையையும்    தீமையும்    அடங்குது
 ஏடுகள்    எதையோ    எழுதுது -அதற்கு
 ஏற்படும்    நிலைமைகள்    புரியுது

 பெண்ணிற்கு    கொடுமைகள்    செய்யுது -அதனை
 பெரிய    போர்வைகள்    மறைக்குது
 கண்ணையும்    காதையு ம்    கெடுக்குது -அதுவே
 கலாசார    மென்றே    புளுகுது

 விண்ணிலும்    வேடிக்கை    காட்டுது -மனிதனை
 வேடிக்கை    பொருளாக்கி    கொல்லுது
 உண்மையை     மறைத்தே    உளறுது -ஏன்
 உலகத்தை    தூசென    மதிக்குது

 ஏழையின்    வயிற்றிலே    அடிக்குது --அதை
 எதிர்த்துக்    கேட்டாலே    முறைக்குது
 வேலைக்கு    கூலியைக்    குறைக்குது -அவர்
 வேதனைப்    படுவதை    ரசிக்குது

 அணைகளைப்    புதிதாய்க்    கட்டுது -ஏனோ
 அரசியல்    புகுந்துமே    கெடுக்குது
 துணையைப்    பகையென    நினைக்குது -நல்ல
 தோழமை    உணர்வினை    வெறுக்குது

 மாறிடும்    என்று நாம்    நினைக்கிறோம் -தமிழ்
 மண் வளம்    பெருகிட    உழைக்கிறோம்
 யாரிடம்    குறைகளைச்    சொல்வது -இனி
 எப்படி    துயர்களை    வெல்வது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக