கனவினில் கண்டது யாவும் -இனி
எனக்கு கைவரக் கூடுமோ
காதலி நான்வாழக் கையைக் கொடு -உனது
கருணை மழையிலே நனையவிடு
அன்னமே எனக்கொரு ஆணையிடு -இந்த
அடிமைக்கு அனுதினம் வேலைகொடு
முன்னமே யாசித்தேன் பிச்சையிடு -இல்லையேல்
மோகத்தை இன்றைக்கே தீர்த்துவிடு
கரிய கூந்தலால் கட்டிவிடு -எனது
கற்பனைக் குதிரையைத் தட்டிக் கொடு
அறிந்திட முடியாத ஆழக் கடல் -நான்
ஆயிரம் எழுதினேன் அன்புமடல்
சிரித்து எந்தனை ச் சிறையிலிட்டாய் -இந்த
சிறுவனை ஏனின்னும் அலையவிட்டாய்
உரித்த பழச்சுளை நீயல்லவா -நல்
உயிரில் கலப்பவன் நானல்லவா
வெறுத்து ஒதுக்குதல் நீதியல்ல -நானும்
வெம்பித் தவிக்கிற சாதியல்ல
பொறுத்து உனக்காகப் பார்க்கிறேன் -உன்னை
புரிந்தவன் அதனாலே கேட்கிறேன்
மஞ்சம் அழைக்குது மறுக்காதே -பிரிய
மணவாளன் துடிக்கிறேன் மிரளாதே
நெஞ்சில் எனக்கொரு இடமளிப்பாய் -நாளும்
நினைத்து வாழ்ந்திட வரமளிப்பாய்
எனக்கு கைவரக் கூடுமோ
காதலி நான்வாழக் கையைக் கொடு -உனது
கருணை மழையிலே நனையவிடு
அன்னமே எனக்கொரு ஆணையிடு -இந்த
அடிமைக்கு அனுதினம் வேலைகொடு
முன்னமே யாசித்தேன் பிச்சையிடு -இல்லையேல்
மோகத்தை இன்றைக்கே தீர்த்துவிடு
கரிய கூந்தலால் கட்டிவிடு -எனது
கற்பனைக் குதிரையைத் தட்டிக் கொடு
அறிந்திட முடியாத ஆழக் கடல் -நான்
ஆயிரம் எழுதினேன் அன்புமடல்
சிரித்து எந்தனை ச் சிறையிலிட்டாய் -இந்த
சிறுவனை ஏனின்னும் அலையவிட்டாய்
உரித்த பழச்சுளை நீயல்லவா -நல்
உயிரில் கலப்பவன் நானல்லவா
வெறுத்து ஒதுக்குதல் நீதியல்ல -நானும்
வெம்பித் தவிக்கிற சாதியல்ல
பொறுத்து உனக்காகப் பார்க்கிறேன் -உன்னை
புரிந்தவன் அதனாலே கேட்கிறேன்
மஞ்சம் அழைக்குது மறுக்காதே -பிரிய
மணவாளன் துடிக்கிறேன் மிரளாதே
நெஞ்சில் எனக்கொரு இடமளிப்பாய் -நாளும்
நினைத்து வாழ்ந்திட வரமளிப்பாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக