சனி, 19 ஜூலை, 2014

கண்ணான கண்ணே 286.

கண்ணான     கண்ணே -என்
 கனிமுத்துப்     பெண்ணே
 என்னாசைக்     கிளியே -நீ
 இன்பமாய்     வாழ்க

 காலையில்     எழுக -உனது
 கடமையை     முடிக்க
 வேலையை     முடித்து -விரைந்து
 பள்ளி       செல்க

 படிப்பிலே     கவனம் -கொண்ட
 பார்வையில்     நிதானம்
 துடிப்பாக     வளரு -என்றும்
 துன்பத்தை     தள்ளு

 பிரியமுடன்     பழகு -நல்ல
 பெருமையே     அழகு
 அரியவற்றை     கற்பாய் -அன்பால்
 அனைவரையும்     வெல்வாய்

 படித்தவாறு     நடக்க -மனதில்
 பக்குவம்     கொள்வாய்
 தடித்த     ஒரு வார்த்தை -சொல்லல்
 தவறு தான்     பெண்ணே

 கிடைப்பதை      உண்ணு --வரும்
 கிளர்ச்சி தனைக்     கொல்லு
 நினைத்ததை     முடிக்கும் -வலிய
 நெஞ்சுறுதி     கொள்க

 தெய்வம் தனை     தொழுக -தினமும்
 பள்ளி        செல்க
 உய்யும் வழி     இதுவே -நான்
 உனக்குச்     சொன்னேன்  கண்ணே













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக