கண்ணான கண்ணே -என்
கனிமுத்துப் பெண்ணே
என்னாசைக் கிளியே -நீ
இன்பமாய் வாழ்க
காலையில் எழுக -உனது
கடமையை முடிக்க
வேலையை முடித்து -விரைந்து
பள்ளி செல்க
படிப்பிலே கவனம் -கொண்ட
பார்வையில் நிதானம்
துடிப்பாக வளரு -என்றும்
துன்பத்தை தள்ளு
பிரியமுடன் பழகு -நல்ல
பெருமையே அழகு
அரியவற்றை கற்பாய் -அன்பால்
அனைவரையும் வெல்வாய்
படித்தவாறு நடக்க -மனதில்
பக்குவம் கொள்வாய்
தடித்த ஒரு வார்த்தை -சொல்லல்
தவறு தான் பெண்ணே
கிடைப்பதை உண்ணு --வரும்
கிளர்ச்சி தனைக் கொல்லு
நினைத்ததை முடிக்கும் -வலிய
நெஞ்சுறுதி கொள்க
தெய்வம் தனை தொழுக -தினமும்
பள்ளி செல்க
உய்யும் வழி இதுவே -நான்
உனக்குச் சொன்னேன் கண்ணே
கனிமுத்துப் பெண்ணே
என்னாசைக் கிளியே -நீ
இன்பமாய் வாழ்க
காலையில் எழுக -உனது
கடமையை முடிக்க
வேலையை முடித்து -விரைந்து
பள்ளி செல்க
படிப்பிலே கவனம் -கொண்ட
பார்வையில் நிதானம்
துடிப்பாக வளரு -என்றும்
துன்பத்தை தள்ளு
பிரியமுடன் பழகு -நல்ல
பெருமையே அழகு
அரியவற்றை கற்பாய் -அன்பால்
அனைவரையும் வெல்வாய்
படித்தவாறு நடக்க -மனதில்
பக்குவம் கொள்வாய்
தடித்த ஒரு வார்த்தை -சொல்லல்
தவறு தான் பெண்ணே
கிடைப்பதை உண்ணு --வரும்
கிளர்ச்சி தனைக் கொல்லு
நினைத்ததை முடிக்கும் -வலிய
நெஞ்சுறுதி கொள்க
தெய்வம் தனை தொழுக -தினமும்
பள்ளி செல்க
உய்யும் வழி இதுவே -நான்
உனக்குச் சொன்னேன் கண்ணே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக