வியாழன், 24 ஜூலை, 2014

இதய தீபம் 300***

உலவும்    காற்றே
 உனக்கொரு    சேதி
 நான்   சொன்னபடியே
 நீயும்    சொல்லிட வேண்டும்

 எனது    எண்ணம்
 முழுவதும்    அவர் தான்
 எடுத்துச்    சென்றே
 சொலவும்    வேண்டும்

 நெஞ்சில்    அணைத்தார்
 நேசம்    தந்தார்
 வஞ்சிப்    பெண்ணையே
 கொஞ்சியே    மகிழ்ந்தார்

 மடியினில்    சாய்ந்தேன்
 மையலில்    வீழ்ந்தேன்
 அடிமையாகி    அவருக்காக
 அனுதினமும்    வாழ்கின்றேனே

 அன்று    சென்றார்
 இங்கு    இல்லை
 ஆசைகள்    அதிகம்
 அவரே    அறிவார்

 இன்றே    அவரை
 திரும்பிடச்    சொல்லு
 இதயத்தில்    தீபங்கள்
 ஏற்றிட ச்    சொல்லு

 இரண்டு    உள்ளங்கள்
 எங்கள்    இல்லம்
 இன்ப    மேகங்கள்
 நிறையவே    பொழியும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக