புதன், 16 ஜூலை, 2014

சிவசிதம்பரம் 279.

ஆல கால    விஷத்தினை   அள்ளிஉண்ட  சிவமே
 காலைத்  தூக்கி   ஆடினார்   தில்லையில்
 கோலம் நிறை   சக்தியும்   கோபமாக   ஆடினார்
 குன்றதிர   கோள்  அதிர   கோர்வையாக   ஆடினார்

 சக்தி  ஆடும்   வேகத்தில்   சகலமும்   ஆடின
 சித்திரையில்  நிலவு  போல்  சிறப்பாக   ஆடினார்
 முக்தி   நிறை   முனிவர்கள்   முன்னிலை  பெற்றனர்
 சக்தி  சக்தி  என்றே   சந்தோசம்   கொண்டனர்

 மைந்தர்கள்   எதிரே   மாதாவும்   ஆடினார்
  ஆனைமுகன்  மத்தளம்   அழகாகத்   தட்டினார்
 வேலனும்    தாயினுக்கு   வேணுகானம்  வாசித்தார்
 பாங்கியர்கள்  சூழவே   பதுமை போல்   ஆடினார்

 தேவாதி   தேவர்கள்   தில்லையில்   கூடினர்
 பாதாதி   கேசம்  அவிழ   பரமசிவன்   ஆடினார்
 நாரணன்   நம்பியும்   நாட்டியத்தை  ரசித்தார்
 தங்கை  ஆடும்   ஆட்டத்தில்   கைதாள மிட்டுக்  காட்டினார்

 இருவரின்   ஆட்டமும்  இணையாக   நடந்தன
 ஒருவரை   ஒருவர்   மிஞ்சும்படி   ஆடினர்
 கருநீல   கண்டரோ   காலைஉயரே   தூக்கினார்
 கர்வப்பட்ட   சக்தியோ   தோல்வியைத்   தழுவினார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக