சனி, 26 ஜூலை, 2014

மகராசி 304.

மடியினில்    சாய்ந்திடு   மகராசி -என்
 மனதினில்    குடிபுகு   விலைபேசி
 தினமுனை   நினைத்தால்   முகராசி -நீ
 தேர்    போலவே   வந்திடு   கைவீசி

 நல்லவை   எல்லாம்   நடக்கட்டுமே -நம்
 நாட்டினில்    அமைதி   நிலவட்டுமே
 பொய்யும்   புளுகுகள்   போகட்டுமே -இங்கு
 புதுமை    எண்ணங்கள்   மலரட்டுமே

 இல்லை என்பது   இல்லாது   போகும் -இனி
 எல்லோரும் சமமெனும்   சூழ்நிலை   ஆகும்
 கல்லாமை   என்பது   காதம்    ஓடும் -வந்த
 காரிருள்    நீங்கிடக் களிப்பும்   கூடும்

 நல்லவர்   தீயவர்   நம்மிலே   உண்டு -தினம்
 நன்மையைச்   செய்வோர்   வாழ்வே   நன்றாம்
 கள்ளம்    மறந்திடில்   காலமும்    நன்று -நாம்
 கண் கவர்   சொர்க்கம்   காண்பது    என்று

 உள்ளதை   எல்லாம்    நல்லதாய்    ஆக்கு --என்றும்
 உன் திறம்    கொண்டு   பிறர் துயர்    நீக்கு
 அல்லதைச்    செய்தால்   அவதிகள்   மிகுமே -அந்த
 அவனருள்   இருந்தால்    அனைவரும்    நலமே

 இருப்பதை   எல்லாம்   பொதுவென    ஆக்கு -உலகில்
 ஏழை    செல்வர்    பேதங்கள்    மாற்று
 பொறுமையால்   வாழ்வினில்  புகழ்க் கொடி   ஏற்று -நீயும்
 பொங்கினால்   ஓடிடும்   புரட்டுகள்    தோற்று



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக