மடியினில் சாய்ந்திடு மகராசி -என்
மனதினில் குடிபுகு விலைபேசி
தினமுனை நினைத்தால் முகராசி -நீ
தேர் போலவே வந்திடு கைவீசி
நல்லவை எல்லாம் நடக்கட்டுமே -நம்
நாட்டினில் அமைதி நிலவட்டுமே
பொய்யும் புளுகுகள் போகட்டுமே -இங்கு
புதுமை எண்ணங்கள் மலரட்டுமே
இல்லை என்பது இல்லாது போகும் -இனி
எல்லோரும் சமமெனும் சூழ்நிலை ஆகும்
கல்லாமை என்பது காதம் ஓடும் -வந்த
காரிருள் நீங்கிடக் களிப்பும் கூடும்
நல்லவர் தீயவர் நம்மிலே உண்டு -தினம்
நன்மையைச் செய்வோர் வாழ்வே நன்றாம்
கள்ளம் மறந்திடில் காலமும் நன்று -நாம்
கண் கவர் சொர்க்கம் காண்பது என்று
உள்ளதை எல்லாம் நல்லதாய் ஆக்கு --என்றும்
உன் திறம் கொண்டு பிறர் துயர் நீக்கு
அல்லதைச் செய்தால் அவதிகள் மிகுமே -அந்த
அவனருள் இருந்தால் அனைவரும் நலமே
இருப்பதை எல்லாம் பொதுவென ஆக்கு -உலகில்
ஏழை செல்வர் பேதங்கள் மாற்று
பொறுமையால் வாழ்வினில் புகழ்க் கொடி ஏற்று -நீயும்
பொங்கினால் ஓடிடும் புரட்டுகள் தோற்று
மனதினில் குடிபுகு விலைபேசி
தினமுனை நினைத்தால் முகராசி -நீ
தேர் போலவே வந்திடு கைவீசி
நல்லவை எல்லாம் நடக்கட்டுமே -நம்
நாட்டினில் அமைதி நிலவட்டுமே
பொய்யும் புளுகுகள் போகட்டுமே -இங்கு
புதுமை எண்ணங்கள் மலரட்டுமே
இல்லை என்பது இல்லாது போகும் -இனி
எல்லோரும் சமமெனும் சூழ்நிலை ஆகும்
கல்லாமை என்பது காதம் ஓடும் -வந்த
காரிருள் நீங்கிடக் களிப்பும் கூடும்
நல்லவர் தீயவர் நம்மிலே உண்டு -தினம்
நன்மையைச் செய்வோர் வாழ்வே நன்றாம்
கள்ளம் மறந்திடில் காலமும் நன்று -நாம்
கண் கவர் சொர்க்கம் காண்பது என்று
உள்ளதை எல்லாம் நல்லதாய் ஆக்கு --என்றும்
உன் திறம் கொண்டு பிறர் துயர் நீக்கு
அல்லதைச் செய்தால் அவதிகள் மிகுமே -அந்த
அவனருள் இருந்தால் அனைவரும் நலமே
இருப்பதை எல்லாம் பொதுவென ஆக்கு -உலகில்
ஏழை செல்வர் பேதங்கள் மாற்று
பொறுமையால் வாழ்வினில் புகழ்க் கொடி ஏற்று -நீயும்
பொங்கினால் ஓடிடும் புரட்டுகள் தோற்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக