திங்கள், 21 ஜூலை, 2014

அமுதம் 290.

நிலவென்ன     பேசும் -உனது
 நினைவெங்கே   செல்லும்
 கனவல்ல   காதல்   உண்மையே

 கண்     பேசுமா -இல்லை
 கடும்    கோபமா
 கண்ணோடு    கண்   பேசும்   நிலையிலே

 தேன்சிந்தும்     மலரிலே -தினம்
 தேடி வரும்     வண்டு போல்
 நானானேன்   உன்னிடம்    அன்பிலே

 நலமாக     வாழலாம் -புது
 நறு மாலை    சூடலாம்
 நாயகியே    நம் வாழ்வில்    விரைவிலே

 ஈருடல்கள்    இணையவே -அங்கு
 இன்ப மழை   பொழியவே
 வேறுலகம்    போகலாமா   விரும்பியே

 காட்சிகளும்    மாறிடும் -பல
 கற்பனைகள்    ஊறிடும்
 ஆட்சி செய்ய    வந்திடுவாய்    அழகியே

 அடிமையென்று    ஆகினேன் -உன்னை
 அனுதினமும்    தொழுகிறேன்
 பிடியிடையில்    சிறை பிடித்தாய்   வாழ்விலே

 வாய் திறந்து    பேசினால் -உனது
 வண்ண மலர்    உதிருமோ
 தாய் மடியில்    கன்றானேன்    தலைவியே

 அமுதமது    பருகுவோம் -மெய்
 அன்பில்    நிதம் உருகுவோம்
 பழ்ச்சுளையாய்    நீ இனிப்பாய்    பதுமையே

 தஞ்சமென்று     கொள்ளுவாய் -இன்றே
 தழுவி   என்னைக்    கொல்லுவாய்
 கொஞ்ச    நீயும்    வந்திடுவாய்    குமரியே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக