நிலவென்ன பேசும் -உனது
நினைவெங்கே செல்லும்
கனவல்ல காதல் உண்மையே
கண் பேசுமா -இல்லை
கடும் கோபமா
கண்ணோடு கண் பேசும் நிலையிலே
தேன்சிந்தும் மலரிலே -தினம்
தேடி வரும் வண்டு போல்
நானானேன் உன்னிடம் அன்பிலே
நலமாக வாழலாம் -புது
நறு மாலை சூடலாம்
நாயகியே நம் வாழ்வில் விரைவிலே
ஈருடல்கள் இணையவே -அங்கு
இன்ப மழை பொழியவே
வேறுலகம் போகலாமா விரும்பியே
காட்சிகளும் மாறிடும் -பல
கற்பனைகள் ஊறிடும்
ஆட்சி செய்ய வந்திடுவாய் அழகியே
அடிமையென்று ஆகினேன் -உன்னை
அனுதினமும் தொழுகிறேன்
பிடியிடையில் சிறை பிடித்தாய் வாழ்விலே
வாய் திறந்து பேசினால் -உனது
வண்ண மலர் உதிருமோ
தாய் மடியில் கன்றானேன் தலைவியே
அமுதமது பருகுவோம் -மெய்
அன்பில் நிதம் உருகுவோம்
பழ்ச்சுளையாய் நீ இனிப்பாய் பதுமையே
தஞ்சமென்று கொள்ளுவாய் -இன்றே
தழுவி என்னைக் கொல்லுவாய்
கொஞ்ச நீயும் வந்திடுவாய் குமரியே
நினைவெங்கே செல்லும்
கனவல்ல காதல் உண்மையே
கண் பேசுமா -இல்லை
கடும் கோபமா
கண்ணோடு கண் பேசும் நிலையிலே
தேன்சிந்தும் மலரிலே -தினம்
தேடி வரும் வண்டு போல்
நானானேன் உன்னிடம் அன்பிலே
நலமாக வாழலாம் -புது
நறு மாலை சூடலாம்
நாயகியே நம் வாழ்வில் விரைவிலே
ஈருடல்கள் இணையவே -அங்கு
இன்ப மழை பொழியவே
வேறுலகம் போகலாமா விரும்பியே
காட்சிகளும் மாறிடும் -பல
கற்பனைகள் ஊறிடும்
ஆட்சி செய்ய வந்திடுவாய் அழகியே
அடிமையென்று ஆகினேன் -உன்னை
அனுதினமும் தொழுகிறேன்
பிடியிடையில் சிறை பிடித்தாய் வாழ்விலே
வாய் திறந்து பேசினால் -உனது
வண்ண மலர் உதிருமோ
தாய் மடியில் கன்றானேன் தலைவியே
அமுதமது பருகுவோம் -மெய்
அன்பில் நிதம் உருகுவோம்
பழ்ச்சுளையாய் நீ இனிப்பாய் பதுமையே
தஞ்சமென்று கொள்ளுவாய் -இன்றே
தழுவி என்னைக் கொல்லுவாய்
கொஞ்ச நீயும் வந்திடுவாய் குமரியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக