செவ்வாய், 15 ஜூலை, 2014

உயிரே 272.

உன்னை நினைத்ததென்ன -அன்பே
 உயிரில்    கலந்ததென்ன
 இன்னும்  நினைவில்லையோ -அது
 இளமைக்  காணவில்லையோ

 பொன்னில்   பிறந்தவளே -வாசப்
 பூவாய்    மலர்ந்தவளே
 கண்ணில்   நிறைந்தவளே -என்
 கருத்தைக்  கவர்ந்தவளே

 உள்ளம்   தெளிவில்லையோ -காதல்
 உணர்ச்சி  வரவில்லையோ
 சொல்லத்   துடிக்குதடி -அந்த
 சுகத்தை   நினைக்குதடி

 சோலை    நடுவினிலே -உன்னை
 சுற்றிலும்   தேடுகிறேன்
 பாலை    நிலமானேன் --என்னை
 பார்த்திட   வரவில்லையே

 நாளும்    பறக்குதடி -மண
 நாளினி    வருமோடி
 பாழும்    கவலைகளால் -நெஞ்சம்
 பாகென    உருகுதடி

 சிக்கித்    தவிக்கின்றேன் -தனிமை
 சிறையினில்  இருக்கின்றேன்
 வெட்கித்   துடிக்கின்றேன் --இந்த
 வேதனை   தீருமோடி

 வாழ்ந்திட   வரமளிப்பாய் -காதல்
 வளர்த்திட   முடிவெடுப்பாய்
 ஏங்கிடும்   நிலையானேன் -நீ
 இன்றேனும்   வருவாயோ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக