உன்னை நினைத்ததென்ன -அன்பே
உயிரில் கலந்ததென்ன
இன்னும் நினைவில்லையோ -அது
இளமைக் காணவில்லையோ
பொன்னில் பிறந்தவளே -வாசப்
பூவாய் மலர்ந்தவளே
கண்ணில் நிறைந்தவளே -என்
கருத்தைக் கவர்ந்தவளே
உள்ளம் தெளிவில்லையோ -காதல்
உணர்ச்சி வரவில்லையோ
சொல்லத் துடிக்குதடி -அந்த
சுகத்தை நினைக்குதடி
சோலை நடுவினிலே -உன்னை
சுற்றிலும் தேடுகிறேன்
பாலை நிலமானேன் --என்னை
பார்த்திட வரவில்லையே
நாளும் பறக்குதடி -மண
நாளினி வருமோடி
பாழும் கவலைகளால் -நெஞ்சம்
பாகென உருகுதடி
சிக்கித் தவிக்கின்றேன் -தனிமை
சிறையினில் இருக்கின்றேன்
வெட்கித் துடிக்கின்றேன் --இந்த
வேதனை தீருமோடி
வாழ்ந்திட வரமளிப்பாய் -காதல்
வளர்த்திட முடிவெடுப்பாய்
ஏங்கிடும் நிலையானேன் -நீ
இன்றேனும் வருவாயோ
உயிரில் கலந்ததென்ன
இன்னும் நினைவில்லையோ -அது
இளமைக் காணவில்லையோ
பொன்னில் பிறந்தவளே -வாசப்
பூவாய் மலர்ந்தவளே
கண்ணில் நிறைந்தவளே -என்
கருத்தைக் கவர்ந்தவளே
உள்ளம் தெளிவில்லையோ -காதல்
உணர்ச்சி வரவில்லையோ
சொல்லத் துடிக்குதடி -அந்த
சுகத்தை நினைக்குதடி
சோலை நடுவினிலே -உன்னை
சுற்றிலும் தேடுகிறேன்
பாலை நிலமானேன் --என்னை
பார்த்திட வரவில்லையே
நாளும் பறக்குதடி -மண
நாளினி வருமோடி
பாழும் கவலைகளால் -நெஞ்சம்
பாகென உருகுதடி
சிக்கித் தவிக்கின்றேன் -தனிமை
சிறையினில் இருக்கின்றேன்
வெட்கித் துடிக்கின்றேன் --இந்த
வேதனை தீருமோடி
வாழ்ந்திட வரமளிப்பாய் -காதல்
வளர்த்திட முடிவெடுப்பாய்
ஏங்கிடும் நிலையானேன் -நீ
இன்றேனும் வருவாயோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக